24 special

செந்தில் பாலாஜிக்காக துடிக்கும் முதல்வர்...!கேள்வி கேட்கும் அண்ணாமலை...!

Annamalai,senthil balaji
Annamalai,senthil balaji

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்பொழுது முழு வீச்சில் இறங்கி தமிழக அரசியலில் அடித்து ஆடி வருகிறார். குறிப்பாக அவர் திமுக அரசை எதிர்த்து கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும் தமிழக மக்கள் மத்தியில் பிரதான எதிர்கட்சியே பாஜக தான் என்கின்ற அளவில் எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது! 


இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது, அப்போது பொதுக்கூட்டம் நடந்த பொழுது திடீரென மழை வந்தது, அப்போது மழையையும் பொருட்படுத்தாமல் தொண்டர்களுடன் நின்று மைக் பிடித்தவாறு அண்ணாமலை இறங்கி பேச ஆரம்பித்தார். 

அப்போது செந்தில் பாலாஜிக்காக முதல்வர் ஸ்டாலின் துடிப்பதை பற்றி அண்ணாமலை பேசியது மக்கள் மத்தியில் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டது. அப்போது பேசிய அவர், 'சாதாரண மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டு கஷ்டப்படும் பொழுது செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் வைத்து பார்க்க வேண்டும் என ஓடுகிறீர்களே முதல்வரே என அவர் எழுப்பிய கேள்வி மக்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது!

ஏற்கனவே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் தற்போது செல்லும் இடங்களில் எல்லாம் அண்ணாமலை முதல்வர் செந்தில்பாலாஜிக்காக ஓடுவதை பற்றி பேசி வருவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.