24 special

மக்கள் மத்தியில் முன்னேறி வரும் பாஜக ...! இனி திமுகவிற்கு வீழ்ச்சி தான்...!

Anna
Anna

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரண்டு கட்ட யாத்திரையை, திமுகவின் பல முயற்சிகளைத் தாண்டியும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. உளவுத்துறை வைத்து, அத்தனை ரிப்போர்ட் தயார் செய்தும், என்ன செய்ய வேண்டும் என திட்டமிட்டு, பல பொய்களை பரப்பியும், அண்ணாமலையின் இரண்டு கட்ட யாத்திரையை, மக்களிடம் உயர்ந்து வரும் செல்வாக்கை திமுகவால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.


இந்த நிலையில், 2021ல், தீபாவளிக்கு பெட்ரோல் விலை குறைத்தார். இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தது இல்லத்தரசிகளுக்கு மிகப் பெரிய பரிசாகும். தேர்தலை முன்னிட்டு இல்லாமல், தேவையறிந்து விலையை குறைந்த பிரதமர் மோடிக்கு பாஜக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் படி,  “சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்ற பாரதியின் நூற்றாண்டு கனவு இன்று மேடை தோறும் அவரை முழங்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நனவாகியுள்ளது. “சந்திரன் ஒளியில் அவளை கண்டேன்” என்ற பாரதியின் வரிகளுக்கு ஒப்ப “சிவசக்தி” என்று பெயரிட்டது போற்றுதலுக்கும், பெருமைக்கும் உரியது. தோல்வி கண்டு துவளாமல், வெற்றியை எப்படி சாதிப்பது என்பதற்கு சந்திராயன்-3 மிகச் சிறந்த உதாரணம்.

பாரில் பாரதத்தின் பெருமையை நிலைநாட்டி, இந்திய அறிவினை எடுத்துக்காட்டி, ஒவ்வொரு இந்தியனையும் பெருமைகொள்ள செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் , அவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து சாதனை படைக்க செய்த, மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும் கோடானகோடி நன்றிகளும், பாராட்டுக்களும்.

இரண்டாவதாக சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்ததற்கு பாரத பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தேசத்துப் பெண்களை தெய்வமென மதிக்கும் குணக்குன்று, நமது பாரதப் பிரதமர் அவர்கள். அவர்களின் அல்லல் நீக்கி, பெறாத பிள்ளையாய் துணை நிற்பவர் பிரதமர் அவர்கள். விழாக்காலங்களில் விலை மலிவு என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் என்பதை நன்கு அறிந்தவர். 2021ல், தீபாவளிக்கு பெட்ரோல் விலை குறைத்தார். இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தது இல்லத்தரசிகளுக்கு மிகப் பெரிய பரிசாகும். தேர்தலை முன்னிட்டு இல்லாமல், தேவையறிந்து , குடும்ப உறுப்பினரை போல, தேசத்து குடும்பங்களுக்கு இன்பத்தை வாரி வழங்கும் பாரத பிரதமர் அவர்களுக்கு அனைத்து தாய்மார்கள் சார்பிலும் நன்றி 

3வது தீர்மானமாக திராவிட மாயையிலிருந்து தமிழகத்தை மீட்டு, அதன் புராதானத்தை, கலாச்சார தொன்மையினை மீட்டு.பிரதமர் அவர்களோடு தோள் கொடுத்து உழைக்கும் நமது மாநில தலைவர், அண்ணாமலை “என் மண், என் மக்கள்” யாத்திரையின் முதற்கட்டம், எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது. எதிர்கால தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக,

ஒளிவு மறைவற்ற தலைவராக, உள்ளதை உள்ளபடி உரைக்கும் உன்னதராக இளைஞர்களும், மக்களும் தலைவர் அவர்களை பார்க்கிறார்கள். 2ஆம் கட்ட யாத்திரையானது வருகின்ற செப்டம்பர் 4ந் தேதி தொடங்க உள்ளது. முதற்கட்டத்தை விட இது இன்னும் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அண்ணாமலையின் மூன்றாம் கட்ட யாத்திரை குறித்து இம்முறையும் உளவுத்துறை வலுவான ரிப்போர்ட் ஒன்றை ஆளும் தரப்பிடம் தந்துள்ளதாம். அதைப் பார்த்ததில் இருந்து அறிவாலயம் தரப்பு தூக்கமின்றி தவிக்கிறதாம். நிலைமை இப்படி இருந்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமாக மண்ணைக் கவ்வ வேண்டியதுதான், என்ன நடக்கிறது கட்சி மட்டத்தில் என நிர்வாகிகள் விரட்டப்படுகிறார்களாம். இதனால் உடன்பிறப்புகள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நீங்கள் என்ன வேணுமோ செய்யுங்க, நாங்கள் மக்கள் மத்தியில் உங்கள் தகிடுதத்தங்களை எடுத்து வைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று முன்னேறி வருகிறது பாஜக தரப்பு.