24 special

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு.! தேர்தல் ஆணையம் கொடுத்த அதிர்ச்சியில் திமுகவினர் திக் திக்..!


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமைக்கப்பட்டிருந்த திமுகவின் 10 பணிமனைகளை தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவேராவின் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்தால் உடனடியாக பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

தேர்தல் ஆணையம் அறிவித்த உடனே ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன, மறுபுறம்  இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து திமுக தனது ஈரோடு தேர்தலில் கள வேலைகளை முழுமூச்சாக துவக்கியது. திமுகவின் அமைச்சர் செந்தில் பாலாஜி ஈரோடு இடைத்தேர்தல் திமுக வெற்றி பெறும் பொறுப்பை முழுதாக பார்த்துக்கொண்டார், இதன் காரணமாக 11 திமுக அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.

எங்கு பார்த்தாலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் கரை வேட்டி தான் தென்படுகிறது.    இது ஒரு புறம் இருக்கையில் மறுபுறம் அதிமுக தரப்பில் திமுகவினர் பணப் பட்டுவாடா செய்கின்றனர், முறைகேடுகள் ஈடுபடுகின்றனர் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

மறுபுறம் பாஜக தரப்போ திமுகவினர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அளவுக்கு  மீறி செலவு செய்து கொண்டிருக்கிறார்கள் என தேர்தல் ஆணையத்திற்கும், தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் புகார் அனுப்பினார்கள்.

மேலும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள் கொட்டகை அமைத்து, தேநீர், பணம் பட்டுவாடா செய்து வந்தனர் என புகார்கள் எழுந்தன.இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தற்காலிகமாக அமைத்திருந்த 10 பணிவினைகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

திமுகவின் 10 பணிமனைகளில் தேர்தல்  விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாக கூறி தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அதிக அளவில் மீறப்பட்டால் ஈரோடு இடைத்தேர்தலை தள்ளிவைக்கும் சூழலே உருவாகும், ஏற்கனவே இதுபோல் ஏற்கனவே தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதி, வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள்  மீறப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருப்பதால் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.