Tamilnadu

பெரிய கருப்பன் தமிழன் பிரசன்னா..? என்ன செய்தார்கள்? போட்டு உடைத்த திருச்சி சூர்யா..!

Trichy surya and periya karupan
Trichy surya and periya karupan

Chennai : பெரிய கருப்பன், தமிழன் பிரசன்னா ஏன் என் தந்தை சிவா என அனைவரும் என்ன செய்தார்கள் பாலியல் ரீதியாக குற்றசாட்டு வந்தது ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் திமுகவில் நடக்கும் உள்கட்சி விவகாரம் குறித்தும் பிரபல செய்தி நிறுவனத்திற்கு கொடுத்துள்ள பேட்டி மூலம் போட்டு உடைத்து இருக்கிறார் திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா.


திமுக மாநிலங்களவை உறுப்பினரும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா தான் பாஜகவில் இணைய போவதாக உறுதிப்படுத்தி இருக்கிறார், தொடர்சியாக தனது உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் தான் பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட போவதாக குறிப்பிட்டு இருக்கிறார் திருச்சி சூர்யா.

திமுகவில் அங்கீகரிக்க படாத அரசியல் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார், கனிமொழி, உதயநிதி, சபரீசன் என மூன்று அணிகள் இருக்கிறது நான் கனிமொழி ஆதரவாளன் என்பதால் ஓரம் கட்டப்பட்டேன், அதோடு எனது தந்தையும்  நானும் பேசுவது கிடையாது, தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசியல் கட்சிகளில் பாஜக நல்ல மாற்றத்தை கொண்டு வருகிறது அதில் இணைந்து, தீவிரமாக பணியாற்ற போவதாக குறிப்பிட்டுள்ளார் திருச்சி சூர்யா.

இது ஒருபுறம் என்றால் திருச்சி சிவா கடுமையாக திமுக மீது குற்றசாட்டு கூறி இருக்கிறார், திமுகவில் எது முறையாக நடக்கிறது, திமுகவில் இதுவரை நான் கனிமொழி ஆதரவாளனாக இருந்தேன். அந்த கனிமொழியை நான் ஏதாவது குற்றம் சொல்கிறேனா? இல்லையே. அவர் நல்லவர் திமுகவில் இதுவரை குற்றசாட்டிற்கு உள்ளான யார் மீது நடவடிக்கை எடுத்தார்கள் கூறுங்கள்.

பெரிய கருப்பன், தமிழன் பிரசன்னா ஏன் எனது தந்தை என பலர் மீது பாலியல் ரீதியாக குற்றசாட்டு வந்தது நடவடிக்கை எடுத்தார்களா? அங்கு நடவடிக்கை எடுக்க தலைமை இல்லை தொண்டர்கள் மனநிலை அறிந்து செயல்பட கூடிய தலைமை, இல்லை ஏற்கனவே ஸ்டாலினை சந்திப்பது கடினம் இப்போது முதல்வர் வேறு ஆகிவிட்டார் சொல்லவா வேண்டும் என கொந்தளித்துள்ளார் திருச்சி சூர்யா.

விரைவில் திமுகவில் இருந்து பல முன்னணி தலைவர்கள் பாஜகவில் இணையலாம் எனவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இது போன்ற பல மாற்றங்கள் அரங்கேறும் எனவும் கூறப்படுகிறது.