Tamilnadu

நாய் மாதிரி கத்துவான் சார்... பிரசன்னாவிற்கு கடும் சிக்கல் உண்மையை மறைக்க முடியாது

Tamilan prasanna
Tamilan prasanna

திமுக செய்தி தொடர்பாளர் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்தி கொண்டதாக செய்தி வெளியான நிலையில் முதலில் நடைபெற்றது தற்கொலையா இல்லை கொலையா என சந்தேகம் அதிகரித்து காணப்படுகிறது.


பிரசன்னா குறித்து பல்வேறு தமிழக மக்களும் சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர், குறிப்பாக ட்விட்டரில், தொலைக்காட்சி விவாதங்களில் கூட நாய் மாதிரி கத்துவான் சார் பிரசன்னா மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு இருக்கமாட்டான் என்பதில் என்ன நிச்சயம் கைது செய்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் உன்மையை கூறுவான்..

என கிருஷ்ணகுமார் என்பவர் ட்விட்டரில் #justicefornathiya ஹாஸ்டாக்கில் கருத்து தெரிவித்து உள்ளார் மேலும் பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் பிரசன்னா  பிரதமர் குறித்து ஒருமையில் பேச அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த H ராஜா பிரசன்னாவின் தொலைபேசி எண்ணை பகிர்ந்து இருந்தார்.

தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் அதிகமாக வர Hராஜா எண்ணிற்கு தொலைபேசி அழைப்பை கால் டைவேர்ட் செய்தார் பிரசன்னா அங்கு தான் ஒரு உண்மை வெளிவந்தது பிரசன்னாவின் மனைவி என இருவர் கால் செய்தனர் எனவும் அவர்களது தொலைபேசி எண்னையும் பகிர்ந்தார், இதையடுத்து பிரசன்னாவிற்கு இரண்டு மனைவிகளா என கேள்வி எழுந்தது.

இப்போது பிரசன்னாவிற்கு எத்தனை மனைவி என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் அதற்கு பிரசன்னா தரப்பில் இருந்து விளக்கம் இதுவரை கொடுக்கப்படவில்லை, இந்நிலையில் உடனடியாக பிரசன்னா மனைவியின் மர்ம மரணம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் தமிழக காவல்துறை விசாரணை நடத்தினால் நியாயமாக இருக்காது எனவும் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து பிரசன்னாவிற்கு கடும் சிக்கல் உண்டாகியுள்ளது, ஏற்கனவே வீடியோ ஒன்று வெளியான நிலையில் கட்சியிலேயே பிரசன்னாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப இப்போது மனைவி மர்மமான முறையில் தூக்கில் தொங்கியது கடும் சிக்கலை பிரசன்னாவிற்கு உண்டாக்கியுள்ளது.