Tamilnadu

எல்லாம் "கிருபை" இணையத்தில் வைரலாகும் டப்பிங் பாடல்.. வெறிகொண்டு தேடும் திமுகவினர் ! யாருயா அந்த சிங்கர்!

Stallin
Stallin

தமிழகத்தில் சினிமா பாடல்களை கொண்டு ஒரு குழு ஆளும் கட்சியை கிண்டல் செய்து வருகிறது கருத்து சுதந்திரம் அளித்த வரையறைக்கு உட்பட்டு பாடல்கள் மூலம் மீம்ஸ் ட்ரோல்களை இந்த குழு செய்துவருவதாக கூறப்படுகிறது, முன்பு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்களை கிண்டல் செய்து இதே போன்ற ஒரு பாடல் வைரலான நிலையில் தற்போது கிருபை கிருபை என்ற பாடல் வைரலாகி வருகிறது. 


திமுக ஆட்சி அமைந்து 200 நாட்கள் ஆனதை பாடல் மூலம் கிண்டல் செய்யும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளதாக அதில் கமெண்ட்கள் இடம்பெற்றுள்ளன, இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இணையத்தில் பிரபலம் அடைந்த கிருபை கிருபை என்ற பாடலை டப்பிங் செய்து அதனை ட்ரோல் மெட்டிரியலாக மாற்றியுள்ளனர் நெட்டிசன்கள்.

விடியலும் கிடைக்கல.. தண்ணியும் வடியல இருந்தாலும் வாழ்த்துரேனே ஏன்? ஏன்? ஏன்? என தொடங்கும் பாடல் ஆளும் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது, இந்த பாடலை வெளியிட்ட நபர்கள் யார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் அதே நேரத்தில் கருத்து சுதந்திரத்தின் வழியில் பாடலை வெளியிட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்து இருப்பதாக டப்பிங் குழுவினருக்கு ஆதரவும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழலில் நெல்லை மகேந்திரன் என்ற சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள டப்பிங் பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. வைரலாகும் பாடல் வரிகளில் இன்னும் ஒன்னும் செய்யல. தண்ணி கூட வடியல..

ஆனாலும் வாழ்த்துறாங்க ஏன் ஏன் ஏன்? என்றும் தக்காளி விலை குறையல.. ஆனாலும் உருட்டுறாங்க ஏன் ஏன் ஏன் என கிண்டல் செய்யும் விதமாக வரிகள் அமைந்துள்ளன.  இந்த பாடலை பாடியவர் யார் என்ற கேள்வியும் அவரது பாடல் வரி தேர்வுகள் சிறப்பாக இருப்பதாகவும் கமெண்ட்கள் இடம்பெற்றுள்ளன. வைரலாகும் பாடல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.