Tamilnadu

மகளை அரசு பள்ளியில் சேர்த்த பிரபல திரௌபதி நடிகர் ! "இந்தி கத்துக்குட்டா இந்தியாவையே தமிழன் ஆளுவான்" என்றும் மேற்கோள்!


திரௌபதி மற்றும் ருத்ரதாண்டவம் படத்தில் நடித்த நடிகர் ஜெயம் கோபி, இந்து கொள்கைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். இவர் தனது முகநூல் பக்கத்தில் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து உள்ளேன் என குறிப்பிட்டு தனது மகள் புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார். 


அதில், நண்பர்களுக்கு வணக்கம்.என் மகளை அரசுபள்ளியில் சேர்த்துள்ளேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.. நேற்று முதல் பள்ளி தொடங்கிவிட்டது..மகள் சாதானாவும் உற்சாகமாக பள்ளி செல்ல தொடங்கிவிட்டாள்.

இதை பதிவை படிக்கும் என் நண்பர்களும் எதிர்கால சந்ததியினரும் உங்கள் பிள்ளைகளையும் அரசு பள்ளியில் சேர்க்க முன்வாருங்கள் என்ற அன்பான வேண்டுகோளையும் முன்வைக்கிறேன்..


மேலும் என் மகளுக்கு இந்தி மொழி படிப்பையும் தனியாக Class வைத்து சொல்லி கொடுக்கவுள்ளேன். எனதருமை நண்பர்களே உங்கள் வீட்டு குழந்தைகளுக்கும் கட்டாயம் இந்தி மொழியை கற்றுக்கொடுங்கள்..இந்தி மட்டுமல்ல மற்ற உலக மொழிகளையும் கற்றுக்கொடுங்கள்.

தமிழ் மொழி நம் உயிருக்கு நிகரானது...ஆனால் இந்த திராவிட அரசியல் வாதிகள் இந்தியை திணிக்காதே என்று நம்மை இந்தி படிக்க விடாமல் செய்துவிட்டு அவர்கள் வீட்டு குழந்தைகளுக்கு மட்டும் பல மொழிகளை கற்றுக்கொடுத்து அவர்களுக்கு கீழே நம்மை வைத்து இன்னும் நம் தலைமுறையை அடிமையாக்கி வைத்து இருக்கிறார்கள். இதற்க்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி உள்ளது.

ஆகையால் மக்களே நம் முன்னோர்கள் செய்த தவறை நாம் செய்யக்கூடாது...நம் வீட்டு பிள்ளைகளுக்கு சகல மொழிகளையும் கற்றுக்கொடுப்போம்..தமிழனையும் தமிழ்நாட்டையும் உலக அரங்கில் தலைநிமிரச்செய்வோம்... 

இந்தி கத்துக்குட்டா இந்தியாவையே தமிழன் ஆளுவான்.. மத்திய அரசு அமைச்சர்கள் ?மத்திய அரசு பிரதமர்கள் பேசுற இந்தி தமிழனுக்கு புரிஞ்சிட்டா அப்புறம் நம்ம பொழப்புல மண்ணு விழுந்துரும் அதனால இந்த மக்களை இந்தி படிக்கவே விடக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம்.இதுதான் கசப்பான உண்மை.அதனாலதான் நம்மூர் அரசியல்வாதிகள் இந்தியை திணிக்காதே னு நாடகம் ஆடுறாங்க..

விழித்துக்கொள்ளுங்கள் மக்களே.இப்படிக்கு  ■ஜெயம்SKகோபி - என பதிவிட்டு உள்ளார். இவரின் இந்த பதிவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து உள்ளது.