Tamilnadu

எப்படி இருந்த செந்தில் இப்படி ஆயிட்டாரே அடுத்தடுத்து சோகம்... என்னதான் நடக்கிறது!

senthil balaji
senthil balaji

திமுகவிற்கு சார்பாக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரபல தனியார் ஊடகத்தில் இருந்து வெளியேறியவர் செந்தில், சேனலில் இருந்து வெளியேறிய போது கண்ணீர் சிந்தி உறவுகள் எனக்கு வாய்ப்பு தரவேண்டும் என யூடுப் சேனலுக்கு அழுது ஆள் சேர்த்த செந்தில் இப்போது அழுது நாடகம் போடும் செயலுக்கு வந்துள்ளார்.


ஆம் சமீபத்தில் செந்தில் ஆளும் திமுகவிற்கு கொடுக்கும் முட்டு திமுகவினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது, கடந்த இரண்டு நாடுகளுக்கு முன்னர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல் அழுது வீடியோ ஒன்றிணை செந்தில் வெளியிட அது இணையத்தில் பலத்த கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது, செய்தியாளர் என்ற பிம்பத்தை தாண்டி நகைச்சுவை நடிகர் செந்தில் என்ற அடைமொழியை செந்தில் பெற்றுள்ளார்.

இது ஒருபுறம் என்றால் செந்திலின் திடீர் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிறது, அதாவது முதல்வர் ஸ்டாலினை பார்த்து பிரதமர் மோடி அரண்டு போயிருக்கிறார் என்று பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார், இதை பார்த்த பலரும் செந்திலுக்கு முழு பைத்தியம் பிடித்து விட்டது என மோசமாக கிண்டல் அடித்து வருகின்றனர், மாரிதாஸ்,கிஷோர் இன்னும் பிற சமூக வலைத்தள பிரபலங்களே முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியை பின்னி பெடலெடுத்து வருகின்றனர்.

ஆனால் செந்தில் பிரதமர் முதல்வரை பார்த்து அரண்டு போயிருக்கிறார் என பேசுகிறாரே உண்மையில் செந்திலுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பு கின்றனர், டெல்லியில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்துறை அமைச்சர் அமிட்ஷாவை சந்தித்த போது வெளியான புகைப்படங்கள் போதுமே யார் யாரை பார்த்து அரண்டு போயிருக்கிறார்கள் என தெரியும் என கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

இது ஒருபுறம் இருக்க செந்திலுக்கு உண்மையில் அறம் என்ற ஒன்று இருக்கிறதா? தமிழகத்தில் கொடுக்கப்படும் பொங்கல் பொருட்கள் குறித்து தமிழகம் முழுவதும் மக்கள் கிழி கிழி என கிழித்து வருகிறார்கள் உண்மையில் உள்ளாட்சி தேர்தலில் எப்படி வாக்கு கேட்பது என முதல்வர் அரண்டு போயிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது,

இந்த லட்சணத்தில் முதல்வரை பார்த்து பிரதமர் மிரண்டு போயிருக்கிறார் என செந்தில் சொல்கிறாரே முதலில் செந்திலுக்கு ஏதேனும் மன நல பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா என செக் செய்ய வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அடுத்தடுத்து நகைச்சுவை நடிகர்கள் போன்று வீடியோ வெளியிட்டு சோகத்தில் சிக்கியுள்ளார் செந்தில்.