Tamilnadu

அழியுங்கள் இல்லை அழிக்கப்படும் என சொன்ன H.ராஜா ஆட்டத்தை தொடங்கிய ஆதரவாளர்கள்!

H raja
H raja

தமிழக பாஜக மூத்த தலைவர் H ராஜா திராவிடகட்சிகளுக்கும் பெரியாரிஸ்ட்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்,ஈவேரா சிலையில் உள்ள கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என எழுதிய வாசகத்தை அழிக்கவில்லை என்றால் அழிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.


ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த H ராஜா, அந்தத்திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்தினார் அதன் பிறகு திராவிட இயக்கத்தை சேர்ந்த சுப வீரபாண்டியணை கடுமையாக விமர்சனம் செய்தார், இந்த சூழலில் தன்னை ஒருமையில் பேசியதாக சுப.வீரபாண்டியன் சென்னையில் உள்ள கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதற்கு இன்று பதிலடி கொடுத்துள்ளார் H.ராஜா, ஈவேரா சிலையில் உள்ள கடவுளை நம்புகிறவன் முட்டாள் என எழுதிய வாசங்கள் ஒருமையில் இல்லையா? உடனடியாக அந்த வாசகங்களை அழியுங்கள் இல்லை எங்கள் கட்சியில் உள்ள நபர்களை சேர்த்து கொண்டு அழிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு H. ராஜா எச்சரிக்கை விடுத்த நிலையில் திருப்பத்தூரில் ஈவேரா சிலைகள் உடைக்கப்பட்டது அதோடு மற்றொரு இடத்தில் காவி சாயம் பூசி கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர், இந்த சூழலில் கடவுளை நம்புகிறவன் முட்டாள் என எழுதிய வாசகத்தை அழிக்கவில்லை என்றால் அழிப்போம் என H.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளதால்.,

நாளை என்ன நடக்கும் என்ற ஆழந்த கவலையில் பெரியாரிஸ்ட்கள் உள்ளனர். இப்போதே H.ராஜா கருத்திற்கு ஆதரவாக பாஜகவினர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். H ராஜா எச்சரிக்கை விடுத்த வீடியோவை பார்க்க கிளிக் கிளிக்