Cinema

உடைத்து பேசிய விஜய் சேதுபதி அரசியல் கட்சி மீதான பயம்தான் காரணமா ?

vijay sethupathi
vijay sethupathi

நடிகர் விஜய்  சேதுபதியின் சமீபத்திய செயல்பாடுகள் அதிக கவனம் பெற்று வருகின்றன குறிப்பாக தொடர்ச்சியாக அவரது படங்கள் தோல்வியை தழுவி வரும்  நிலையில் சில விவகாரங்களை விஜய் சேதுபதி உடைத்து பேசி வருவது சினிமா துறையிலும் அரசியலிலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது .


சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசினார் சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்கான நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் 1 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்தார் ,அத்துடன் சினிமா துறைக்கு தான் வந்ததே கடனை அடைக்க தான் எனவும் சினிமா பிடித்து எல்லாம் வரவில்லை எனவும் தெரிவித்தார் .

தற்போது சம்பாரிக்கும் பணத்தில் பாதி கடனுக்கே செல்வதாகவும் இருப்பினும் எப்படியாவது வீடு காட்டும் திட்டத்திற்கு தான் பணம் கொடுக்க வேண்டும் என்பதால் இந்த முறை தனியாக எடுத்து வைத்து அந்த பணத்தை செல்வமணி அவர்களிடம் கொடுத்துவிட்டதாக  அவர் குறிப்பிட்டார் அத்துடன் அவர்  தெரிவித்த மற்றொரு கருத்து  அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது .

தனக்கு நன்றாக இந்தி தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார் அத்துடன் மேடையிலும் பேசினார் ,தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியே ஆட்சிக்கு வந்த கட்சி திமுக ,தற்போதுவரை இருமொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திமுக எதிர்த்து வருகிறது இந்த சூழலில் பல்வேறு சாமானிய மக்கள் இந்தி எதிர்ப்பு என்பது நாடகம் சினிமா பிரபலங்கள் , அரசியல்வாதிகள் பிள்ளைகள் என பலரும் இந்தி கற்று கொண்டு சாமானிய வீடு பிள்ளைகளை ஏமாற்றி வருவதாக அவர்கள் குற்றசாட்டு கூறி  வருகின்றனர் .

இதனை மெய்ப்பிக்கும் வகையில் விஜய் சேதுபதி கருத்து அமைந்துள்ளது , இதை தவிர்த்து திரைத்துறையில் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் தான் விருப்பம் இல்லாமலும் ,படம் தோல்வியை தழுவும் என்று தெரிந்தே படங்களில் நடிக்க வேண்டிய சூழல் தற்போது உண்டாகியுள்ளது , பிரபல தயாரிப்பு நிறுவனம் அதனை செய்து வருவதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் .

தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிக்க கட்டாயப்படுத்த பட்டதாகவும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார் , இதனை சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றின் முன்னோட்ட காட்சியை பார்க்க சென்ற சினிமா துறையின் முக்கிய பிரபலம் இந்த கருத்தை பகிர்ந்துள்ளார் இதுதான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது .

காஸ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பொதுவெளியில் பேசிய விஜய் சேதுபதியால் தனக்கு நடந்ததை வெளியில் சொல்ல தைரியம் இல்லையா ? இல்லை சொன்னால் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படுமா என்ற அச்சமா ? என்று பலரும் விஜய் சேதுபதியை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர் .