Tamilnadu

திராவிட பார்வையில் கேள்விகளை எழுப்பியவருக்கு புரியும் மொழியில் பதில் கொடுத்த கிருஷ்ணசாமி!

krishnasamy
krishnasamy

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது கருத்துக்களை தேசிய பார்வையில் ஆணி தரமாக தெரிவிப்பவர் அந்த வகையில் தற்போது அவரிடம் தனியார் பத்திரிகை ஒன்று திராவிட பார்வையாளர்கள் கிருஷ்ணசாமி மீது வைக்கும் குற்றசாட்டுகளை கேள்வியாக எழுப்பியது அதற்கு அவர் அளித்த பதில்கள் முறையான பதிலடியாக அமைந்துள்ளன அவை பின்வருமாறு :- இந்து என்று சொன்னால், அது பாஜகவுக்கு மட்டுமே சொந்தமாகிவிடுமா.? காமதேனு இதழ் - நேர்காணல்


கேள்வி; புதிய தமிழகம் கட்சி இதுவரையில் சாதித்தது என்ன, அடுத்த இலக்கு என்ன? தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, கண்டதேவியில் ஆதிக்கசாதி வெறிக்கு எதிராக அனைத்து சாதியினரும் வடம்பிடித்து தேர் இழுக்கும் உரிமைபெற்றது, வீரன் சுந்தரலிங்கத்துக்கு அரசு விழா, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திலும், அரசு கல்லூரிகளிலும் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப வைத்தது என்று நிறையச் சொல்லலாம்.

தென்மாவட்டங்களில் வன்முறைக்குத் தாக்குபிடிக்க முடியாமல் மீனாட்சிபுரத்தில் மக்கள் மதம் மாறினார்கள். பிற ஊர்களில் மதமாற்றத்துக்குத் தலைப்பட்டார்கள். சாதிவெறியர்கள் தாக்கினால் திருப்பித் தாக்குவோம் என்ற எங்கள் உத்தியால், மக்கள் தன்னம்பிக்கை பெற்றதுடன், மதமாற்ற முழக்கங்களும் மறைந்துபோயின. கட்சியை வலுப்படுத்துவது, புதிய உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் தேர்வு, தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் நிதி நிலையை உயர்த்துவது போன்றவையே கட்சியின் உடனடி செயல்திட்டங்கள். அதற்காக டிசம்பர் 15-ம் தேதி தென்காசி மாவட்ட மாநாடு, ஜனவரி 6-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட மாநாடு தொடர்ந்து அனைத்து மாவட்ட மாநாடுகளையும் நடத்தவிருக்கிறோம்.

கேள்வி; உங்கள் கோரிக்கையில் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் மட்டுமே நிறைவேறியிருக்கிறது. பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டதே? அரசியலாக இல்லாமல், முழுமையான சமூக மாற்றத்துக்காகவே அந்தக் கோரிக்கையை நாங்கள் முன்வைத்தோம். அது நிறைவேற்றப்பட்டிருந்தால், இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்திருக்கும். ஆனால், ஒன்றைச் செய்து இன்னொன்றை நிறைவேற்றாமல் விட்டுவிட்டார்கள். இந்தப் பிரச்சினையை முன்னெடுத்ததால், கடந்த தேர்தலில் எங்கள் கட்சி மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தது. மற்ற சமூக மக்களின் வாக்குகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்கள் வாக்குகளையும் புற்றீசல்போல் புறப்பட்ட அமைப்புகள் சிதறடித்துவிட்டன. எனவே, இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

கேள்வி; ஒரு காலத்தில் தீவிர கம்யூனிஸ்ட்டாக செயல்பட்டு, இப்போது எல்லாப் பிரச்சினைகளிலும் பாஜக ஆதரவு நிலைப்பாட்டையே எடுக்கிறீர்களே, ஏன்? நான் எந்த விஷயத்தில் பாஜகவுக்கு ஆதரவாகப் பேசினேன் என்று சொல்றீங்க? 

கேள்வி; உங்களது முதல் மாவட்ட மாநாட்டுக்குக்கூட இந்து ஒற்றுமை மாநாடு என்று பெயர் வைத்திருக்கிறீர்களே? இந்து என்று சொன்னால், அது பாஜகவுக்கு மட்டுமே சொந்தமாகிவிடுமா? உங்கள் பார்வையே தவறு. இந்து ஒற்றுமை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம் இருக்கிறது. இந்துக்களுக்கு ஒரு வீழ்ச்சி என்றால், அது வெளியில் இருந்து வந்த தாக்குதல்களால் வந்தது கிடையாது. உள்ளுக்குள் இருக்கிற பிரச்சினைகளால்தான் பலவீனம் வந்தது என்பது என்னுடைய கருத்து. இந்துக்களுக்குள் ஒற்றுமை இல்லையென்றால், அது இந்தியாவுக்கே பிளவினை ஏற்படுத்தும். வ.உ.சி., பாரதியார், கட்டபொம்மன், காந்தி எல்லோரும் தேசபக்தி இந்துக்கள் ஒற்றுமை பற்றிப் பேசினார்கள். அவர்கள் எல்லாம் பாஜகவா?

கேள்வி; திரிபுரா கலவரத்தை கண்டித்து விசிக தொடங்கி கம்யூனிஸ்ட்கள் வரையில் போராடுகிறார்கள். ஆனால், அந்தப் பிரச்சினையின் தொடக்கமான பங்களாதேஷ் கலவரத்தைக் கண்டித்து நீங்கள் பேசுகிறீர்களே? அண்டை நாடான பங்களாதேஷில் துர்கா பூஜை சமயத்தில் குரானை கொண்டுபோய் செயற்கையாக வைத்து, வேண்டுமென்றே கலவரத்தை ஏற்படுத்தி அங்கே 22 மாவட்டங்களில் இந்துக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மக்கள் நிர்கதியாக நிற்கிறார்கள். அதைக் கண்டித்து தமிழ்நாட்டில் எந்த இயக்கமும் குரல்கொடுக்கவில்லை என்பதற்காக நானும் அமைதியாக இருக்க வேண்டுமா? பங்களாதேஷ் என்றில்லை, இலங்கையில் போரில் கணவனை இழந்த 42 ஆயிரம் தமிழ்ப்பெண்களை கட்டாய மதமாற்றம் செய்யும் பிரச்சினையிலும் நான் பேசியிருக்கிறேன். அதேபோல பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் இந்துக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. சர்வதேச அளவில் இந்துக்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இங்கேயும் வந்துவிடக்கூடாது என்பதால்தான் நான் இந்து ஒற்றுமை பற்றி பேசுகிறேன்.

கேள்வி; மத்திய அரசின் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் பாதிக்கப்படுகிற இந்துக்களுக்காகவும் குரல் கொடுக்கலாமே? நான் பிரச்சினையின் அடிப்படையில்தான் அரசியல் செய்கிறேன். பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடும். மத்திய அரசு தலா 5, 10 ரூபாயைக் குறைத்திருக்கிறது. அதேபோல மாநில அரசுகளும் குறைத்துக்கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு அரசும் அப்படி குறைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

கேள்வி; தமிழக அமைச்சரவையில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருப்பதாகக் கருதுகிறீர்களா? ஆதிதிராவிடர் என்கிற அடையாளம் வேண்டாம் என்றுதான் அம்மக்கள் தேவேந்திர குல வேளாளர் எனும் அடையாளத்துக்காகப் போராடுகிறார்கள். அவர்களுக்கு அதே ஆதிதிராவிடர் நலத் துறையை வலிந்துகொண்டுபோய் திணிப்பது எந்த வகையில் நியாயம்? இந்தப் பிரதிநிதித்துவம் எப்படி அம்மக்களைத் திருப்திப்படுத்தும்?இவ்வாறு அந்த உரையாடல் தொடங்கி முடிவடைந்துள்ளது.