Politics

சித்தார்த்திற்கு எதிராக களத்தில் இறங்கிய மாரிதாஸ் அதிரடி அறிவிப்பு!

சித்தார்த்திற்கு எதிராக களத்தில் இறங்கிய மாரிதாஸ் அதிரடி அறிவிப்பு!
சித்தார்த்திற்கு எதிராக களத்தில் இறங்கிய மாரிதாஸ் அதிரடி அறிவிப்பு!

உத்திர பிரதேச முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கண்ணத்தில் அரை விழும் என தெரிவித்த நடிகர் சித்தார்த்ற்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.


உத்திர பிரதேச மாநிலத்தில் ஆக்ஸிசன் பற்றாக்குறை இல்லை எனவும் யாராவது வதந்தி பரப்பினாலோ அல்லது அவர்களது நிறுவனம் புரளியை பரப்பினாலோ, புரளியை பரப்புவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்தார் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இந்த செய்தியை மேற்கோள் காட்டி பேசிய நடிகர் சித்தார்த் ஆக்சிஷன் பற்றாக்குறை இல்லை என சொல்பவர்கள் யாராக இருந்தாலும் கன்னத்தில் அரை விழும் என சர்ச்சை கூறிய வகையில் ட்விட் செய்து இருந்தார், இந்த செய்தி கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

நடிகர் சித்தார்த்தின் ஆணவ பேச்சிற்கு எழுத்தாளர் மாரிதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், நீங்கள் நடிகர் சித்தார்த் அவர்களை எங்குப் பார்த்தாலும் “பொய் சொன்னால் அறையலாமா?” என்று கேட்கவும். அவர் தான் சொல்லிருக்கிறார். ஆக ஆம் என்று சொல்லுவார், அங்கேயே அவரை நாளு அறை விடவும் அவருடைய அனுமதியோடு! அவன் சொன்ன பொய்களுக்காக. அது என்ன என்ன பொய்? 

நாளை வீடியோ வெளியிடப்படும். 

(ஒரு முதல்வரை, பிரதமரைப் பார்த்து அவன் திமிருக்கு என்ன வேண்டுமென்றாலும் பேசுவான்!!! எங்கே திமுக பேச சொல்லுங்கள் மாட்டான்.. எனவே விமர்சனம் என்ற பெயரில் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டால் என்ன எதிர்வினை எனக் காட்ட அனைவரும் ஒன்றிணைவோம். நான் வன்முறை தூண்டவில்லை அவன் தான் அறையச் சொன்னான்.. எனவே 4 பேர் துணிந்து நில்லுங்கள் எங்கே அவனைப் பார்த்தாலும்.)

என அதிரடியாக சித்தார்தின் ஆணவ பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார், நடிகர் சித்தாரதின் பொறுப்பற்ற பேச்சிற்கு பாஜகவை தாண்டி மற்ற கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், சித்தார்த் தெரிவித்த பொய்களை மாரிதாஸ் விரைவில் வெளியிடுவார் என்றும் அதன் அடிப்படையில் பொய் செய்தியை பரப்பிய சித்தார்த்தை கண்ணத்தில் அறைய காத்து இருப்பதாக பாஜகவினர் ட்விட் செய்து வருகின்றனர்.