Tamilnadu

போராட்டத்திற்கு நாள் குறித்த அண்ணாமலை முதல்வர் அலுவலகத்தில் இருந்து சற்றுமுன் வந்த செய்தி!

mkstalin and annamalai
mkstalin and annamalai

தமிழக பாஜக சார்பில் நாளை மறுநாள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிராக மிக பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக பாஜக திட்டமிட்டு உள்ளது, அதற்கான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன, மேலும் 9 ம் தேதி அதிமுக சார்பிலும் முல்லை பெரியாரு அணையில் இருந்து நீர் திறக்க கேரள மாநில அமைச்சரை உள்ளே விட்டு மாநில உரிமையை விட்டு கொடுத்த தமிழக திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.


மாநில உரிமை பேசி ஆட்சிக்கு வந்த திமுக கம்யூனிஸ்ட் கேரள அரசிடம் துணை பிரதமர் டீல் பேசி, தமிழகத்திற்கு சொந்தமான முல்லை பெரியாரு அணையை திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை போகிவிட்டார் என பாஜக தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான குற்றசாட்டை முன்வைத்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தமிழக அரசு தமிழக விவசாய மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இது குறித்து நமது TNNEWS24-ல் கவர் ஸ்டோரி வெளியிட்டு இருந்தோம் இந்த சூழலில் விஷயம் விவகாரம் எடுக்க தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அலுவலகத்தில் இருந்து செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளனர் அதில் :- முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை அனுமதிவழங்கியுள்ளதற்கு நன்றி தெரிவித்து,  மாண்புமிகு கேரள மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் மூலம் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 

பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த இந்த நீண்ட கால கோரிக்கை மிகவும் முக்கியமானது என்றும், இந்தக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க இந்த அனுமதி தங்களுக்கு உதவும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனுமதியை வழங்கியமைக்காக கேரள அரசுக்கும், கேரள முதலமைச்சர் அவர்களுக்கும், தமது அரசு சார்பிலும், தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இது இரு மாநில மக்களுக்கும் நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும் வகையில்

அமையும் என்றும், இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நல்லுறவு மேலும் வலுப்பட வழிவகுக்கும் என்றும் நம்புவதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்துவதற்கும்,  அணையின் கீழ்ப்பகுதியில் கேரளாவில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழகத்தின் உறுதிப்பாட்டை தான் மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், 

வண்டிப் பெரியாறு மற்றும் பெரியாறு அணைப் பகுதிக்கு இடையே உள்ள சாலையைச் சீரமைக்கவும், பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்குமாறு, தமிழ்நாட்டின் சார்பில்வந்துள்ள முக்கியமான கோரிக்கைகளையும் விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். பழுதுபார்ப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளத் தேவையான பொருட்கள் மற்றும் இயந்திரங்களை எடுத்துச் செல்ல இந்தச் சாலைப் பணிகள் மிக அவசியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், 

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மரங்கள் வெட்டுவதற்கான அனுமதியை வழங்கிய கேரள முதலமைச்சர் அவர்களுக்கும், கேரள அரசுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் முல்லை பெரியாரு அணை முழுக்க முழுக்க தமிழகத்திற்கு சொந்தமான அணை எனவும், அங்குள்ள 890 ஏக்கர் காடுகளும் அதில் உள்ள இடங்களும் தமிழகத்திற்கு சொந்தமானதாக இருக்க நாம் ஏன் கேரளாவிடம் மரத்தை வெட்ட அனுமதி கேட்க வேண்டும் என பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

தமிழக பாஜக சார்பில் தேனியில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை என்ன கருத்துக்களை முன் வைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது .அண்ணாமலை போராட்டம் அறிவித்த பின்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் கேரளா முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறார் ,போராட்டத்திற்கு பின்னர் பாருங்கள் இருக்கு கச்சேரி என்கின்றனர் பாஜக வட்டாரங்கள் .