Tamilnadu

ரியல் அந்தோணிசாமி மருமகன் போட்டுடைத்த உண்மை வெளிவருகிறது அடுத்த புயல்!

Anthonysamy subinspector jaibhim
Anthonysamy subinspector jaibhim

ஜெய்பீம் விவகாரம் பாமக வன்னியர் சங்கம் ஆகியவை சூர்யாவிற்கு கொடுக்கும் எதிர்ப்புகள் ஒரு புறம் சூர்யா குடும்பத்தினருக்கு கடும் எதிர்ப்புகளை உண்டாக்கிய நிலையில் தற்போது படத்தில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட அந்தோணி சாமி குடும்பத்தினர் காவல்நிலையம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஜெய்பீம் படத்தில் உண்மையான போலீஸ் அதிகாரி அந்தோனிசாமி பெயர் ஏன் பயன்படுத்தவில்லை என நடிகை கஸ்தூரி எழுப்பிய கேள்விக்கு  விவாதம் ஒன்றில் நெறியாளர் பணியை செய்த செந்தில் அந்தோணி சாமி மற்றும் பார்வதி ஆகிய இருவரும் உயிருடன் இருப்பதால் இருவர் பெயரையும் தவிர்த்து விட்டதாக குறிப்பிட்டார்.

செந்தில் பேசிய இந்த தகவல் தவறு என்றும், செந்தில் திட்டமிட்டு பொய்யை பரப்புகிறார் அந்தோனிசாமி இறந்துவிட்டார் அப்படி இருக்கையில் அவர் உயிருடன் இருப்பதால் சட்ட சிக்கல் எழும் என செந்தில் சொன்ன. தகவல் தவறு என்றும், உண்மையான அந்தோனிசாமிக்கு அவரது குடும்பத்தினர் ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பகிர்ந்தனர்.

இதையடுத்து அந்தோனிசாமி குடும்பத்தினர் பற்றிய விஷயம் வெளிவர தொடங்க பலரும் அந்தோணி சாமி மருமகனுக்கு தொடர்புகொண்டு அவரை பற்றி விசாரிக்க பல உண்மைகளை போட்டு உடைத்து இருக்கிறார் அந்தோனிசாமி மருமகன் கர்னாகரன், குறிப்பாக படத்தில் காட்டிய பல தகவல்கள் தவறு என்றும்., உண்மையான வில்லனே அப்போதைய வழக்கறிஞர் சந்துருதான் எனவும்.

எனது மாமா அங்கு பொறுப்பில் இருந்த போது என்னென்ன நடந்தது என்னென்ன பேரம் பேசப்பட்டது என அனைத்தையும் குறிப்பிட்டு, தங்களது ஊரான திருக்கோவிலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாக உண்மையான போலீஸ் அதிகாரி அந்தோணி சாமி மருமகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மேலும் படம் என்ற பெயரில் திட்டமிட்டு தங்கள் மீது வன்மத்தை விதைத்து இருப்பதாகவும், முன்பு பெயர் தெரியாத காரணத்தால் அமைதியாக இருந்தோம் எனவும் தற்போது இந்த விவகாரம் தனது மாமா பெயர் வெளியானதால் தங்கம் குடும்பமே வேதனையில் இருப்பதாகவும், உண்மையான வில்லனே.,

அப்போதைய வழக்கறிஞர் சந்துருவும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தான், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு அனைத்து தகவலையும் இதன் பின்னணியில் யாரெல்லாம் இருந்தார்கள் என அனைத்து விவாகரங்களையும் சொல்ல இருப்பதாகவும் அந்தோனிச்சாமி மருமகன் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது பாமக வன்னியர் அமைப்புகள்  தாண்டி அந்தோனிசாமி குடும்பத்தினரும் ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதுடன் படக்குழு மீதும் அதில் மைய கருவான சந்துரு மீதும் அடுகடுக்கான குற்றசாட்டு சொல்லி இருப்பது சூர்யா தரப்பிற்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.