Tamilnadu

மொத்தமா முடிச்சிட்டிங்க கதறும் மம்தா கணக்கை முடித்த மத்திய அரசு !

Mamta and Mother Teresa
Mamta and Mother Teresa

அன்னை தெரசா தொண்டு நிறுவனம் பெரும் நன்கொடைகளை தவறான விதத்தில் செலவிடுவதாகவும், மதம் மாற்றம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட பணத்தை செலவு செய்து வருவதாகவும்குற்றசாட்டு எழுந்த நிலையில் அனைத்து கணக்குகளும் செயல்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது இந்த தகவல் பொதுவெளியில் வெளிவந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு :-இந்தியாவில் உள்ள அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் மத்திய அரசு முடக்கியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்தார்.


இந்த முடிவு சுமார் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு மற்றும் மருந்து இல்லாமல் உள்ளதாக சமூக ஊடகங்களில் அவர் கூறினார்.  மனிதாபிமான முயற்சிகளில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தினார்.  “கிறிஸ்துமஸ் அன்று மத்திய அமைச்சகம், அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியது.  அவர்களின் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகளின்றி தவித்து வருகின்றனர். சட்டம் மிக முக்கியமானது என்றாலும், மனிதாபிமான முயற்சிகளில் சமரசம் செய்யக்கூடாது, ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் சூர்ஜ்ய காந்த மிஸ்ரா உட்பட மேற்கு வங்கத்தின் பிற தலைவர்களும், கையில் பணம் உட்பட நிறுவனத்தின் அனைத்து கணக்குகளையும் மத்திய அரசு முடக்கிவிட்டதாக சுட்டிக்காட்டி பிரச்சினையை எழுப்பினர். “நேற்று, கிறிஸ்துமஸ் தினமான மத்திய அமைச்சகம் அனைத்து வங்கிக் கணக்கையும் முடக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் மத்திய அமைச்சகம் நாங்கள் கணக்குகளை முடக்கவில்லை எனவும் வெளிநாட்டு பரிவர்த்தனை புதிய விதிமுறையின்படி நிறுவனம் ஆவணங்களை தாக்கல் செய்யாத காரணத்தால் தானாக செயல் இழந்து இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, கோவா தேர்தலில் அன்னை தெரசா டிரஸ்ட் முடக்கம் என புதிய யுத்தியை  பயன்படுத்த நினைத்த மம்தாவின் யுத்தியை மொத்தமாக முடித்தது மத்திய அரசு.

மம்தாவின் யுத்தியை மட்டுமல்ல அவரது தேர்தல் கணக்குகளையும் பக்காவாக பாஜக முடித்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.