Tamilnadu

என்ன திருமாவளவன் சொன்னது என்னாச்சு பாஜக செய்தி தொடர்பாளர் கிண்டல்!

Thirumavalan
Thirumavalan

இலங்கை தமிழர்களை கொன்றதை காட்டிலும் ஆட்சி பதவி தான் முக்கியமா? காங்கிரஸ் தமிழர் விரோத கட்சி என்று சொன்னது எல்லாம் என்னாச்சு? என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக செய்தி தொடர்பாளர் குமரகுரு இது குறித்து அவர் குறிப்பிட்ட கருத்து பின்வருமாறு :-


 நாங்கள் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லை. திமுகவுடன் தான் அமைத்துள்ளோம். எங்கள் கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது அவ்வளவு தான்  - 2019 தேர்தலின் போது திரு. திருமாவளவன் .இந்திய அளவில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க போவதாக அறிந்தேன். தயவு செய்து அந்த தவறை செய்யவேண்டாம் என்று ஸ்டாலின் அவர்களை கேட்டு கொள்கிறேன்.

அது பிஜேபிக்கு சாதகமாக ஆகிவிடும். - இன்று திரு.திருமாவளவன். இலங்கை தமிழர்களை கொன்றதை காட்டிலும் ஆட்சி பதவி தான் முக்கியமா? காங்கிரஸ் தமிழர் விரோத கட்சி என்று சொன்னது எல்லாம் என்னாச்சு?  ராஜிவ் காந்தியை கொன்றவர்களை விடுதலை செய்யவேண்டுமாம். அதே சமயம் காங்கிரசுடன் கூட்டணியும் வேண்டுமாம்.

இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் இதை கேட்டு கைகொட்டி சிறிது ரசித்தது யார் தெரியுமா? இலங்கை தமிழர்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்று மார்தட்டி கொள்ளும் அண்ணன் வைகோ தான் என திருமாவளவன் அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என பேசுவதாக கிண்டல் செய்துள்ளார் குமரகுரு.