Tamilnadu

இறுதி கட்டத்தை எட்டிய ஜெய்பீம் விவகாரம் சூர்யா வீட்டில் இரவோடு இரவாக அரங்கேறிய பதற்றம்!

Jai Bhim issue - Surya in police protection
Jai Bhim issue - Surya in police protection

நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவான ஜெய்பீம் திரைப்படம் தற்போது பார்வையாளர்களை தாண்டி விமர்சனத்தை அதிகம் உண்டாக்கியுள்ளது, அதிலும் குறிப்பாக வன்னியர் சங்கம் சூர்யாவிற்கு 24 மணி நேரம் கெடு விதித்த சூழலில் சூர்யா வீட்டின் முன்பு ஏதேனும் அசம்பாவிதங்கள் உண்டாகலாம் என்பதால் இரவோடு இரவாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


சூர்யா அறக்கட்டளையில் இடம் பெற்றுள்ள புதுமுக இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து பிரபல ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்' 

படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின. இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. 

ஜெய்பீம் திரைப்படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்திருந்த பெயர் மற்றும் குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளம் இடம்பெற்றது போன்றவை தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து அந்த காட்சி நீக்கப்பட்டது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. 

இந்த நிலையில்,  சில அமைப்புகள் சூர்யா வீட்டின் மீது தாக்குதல் நடத்தலாம் என உளவு அமைப்புகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு சூர்யா வீட்டிற்கு போடப்பட்டுள்ளது.

சென்னை தியாகராயநகர் ஆற்காடு தெருவில்  உள்ள சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய முழு போலீஸ் பந்தவஸ்து போடப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சில தரப்பினர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும்.

இன்று அல்லது நாளை மறுநாள் வன்னியர் அமைப்புகள் அதன் கிளை அமைப்புகள் சூர்யா மீது நிச்சயம் உறுதியான நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுவதால் தற்போது இரவிலும் சூர்யா வீட்டின் முன்பு போலீசார், பத்திரிகையாளர்கள் என ஒரு பட்டாளமே குவிந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.