Tamilnadu

பைபிளுடன் பள்ளி வாசலில் நின்ற பெண்ணிற்கு பள்ளி மாணவி கொடுத்த பதில்.. வைரல்..!

School students
School students

தந்தை ஒருவர் தனது மகளை பைபிள் கொடுத்து மத மாற்றத்தை விதைக்க நினைத்த பெண்ணிற்கு அவரது மகள் என்ன செய்தார் என்பது குறித்து முகநூலில் பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு :- பத்து நாட்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன். எனது மகள் பள்ளியிலிருந்து திரும்பும்போது ஒரு பெண்மணி தொடர்ந்து வந்து பைபிளை கையில் வலுக்கட்டாயமாக திணித்து சர்ச்சில் வந்து பிரே செய்தால் நல்ல மதிப்பெண்கள் எடுக்கலாம் என்று வழியில் நிற்க வைத்து வம்பாடியிருக்கிறார்.


எனது மகள் தெளிவாக நான் இந்து நான் ஏன் சர்ச்சிற்கு வரவேண்டும் நான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சத்தம் போட்டு விட்டு வீட்டிற்கு வந்துவிட்டாள். அவளது சீருடையே நன்றாகத் தெரியும் மொகப்பேரில் உள்ள பிரபல இந்து தர்மப்படி நடக்கும் பள்ளியென்று. வேண்டுமென்றே இதை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

என்ன ஒரு அயோக்கியத்தனமான வழிமுறை இது பிஞ்சு மனதில் ஆசையை காட்டி திசை திருப்புவது. எனது மகளுக்கு தெளிவாகச் சொல்லியிருக்கிறேன் இனி ஒருமுறை அதுமாதிரி யாராவது வந்து பேசினால் நமது வீட்டிற்கு வந்து பேச சொல் என்றிருக்கிறேன். எனது மகளுக்கு தெரியும் வீட்டில் வந்து இது மாதிரி பேசினால் என்ன நடக்கும் என்று.

என்னுடைய கவலையெல்லாம் தெருவிலேயே இது மாதிரியான அணுகுமுறையை கையாள்பவர்கள் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் எவ்வாறு தீவிரமாக இதை முன்னெடுப்பார்கள் என்பதுதான். எனவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் அந்த தந்தை இந்த சம்பவம் குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மதமாற்றத்திற்கு இரையாகி மாணவி லாவண்யா என்ற பள்ளி சிறுமி தற்கொலை செய்துள்ள சூழலில் இது போன்று பெண் பிள்ளைகள் உள்ளிட்ட பலருக்கு மத மாற்றத்தின் கோர நிலை குறித்து எடுத்து கூறவேண்டியது பெற்றோர்களின் கடமை என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.