Politics

எதை வைத்து வீழ்த்த திட்டமிட்டார்களோ அதையே வெற்றி வாய்ப்பாக மாற்றிய பாமக பாலு!!! அதிரடி மாற்றம்

எதை வைத்து வீழ்த்த திட்டமிட்டார்களோ அதையே வெற்றி வாய்ப்பாக மாற்றிய பாமக பாலு!!! அதிரடி மாற்றம்
எதை வைத்து வீழ்த்த திட்டமிட்டார்களோ அதையே வெற்றி வாய்ப்பாக மாற்றிய பாமக பாலு!!! அதிரடி மாற்றம்

பாமக வேட்பாளர் பாலு களத்தில் மிக சுறு சுருப்பாக பணியாற்றி வருகிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி , பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ஆகியோரை தனது தொகுதிக்கு அழைத்து தனக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட செய்தவர் தற்போது மேலும் ஒரு அதிரடியை செய்துள்ளார் பாமக வேட்பாளர் பாலு 


மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையாரை அழைத்து தனது தொகுதியில் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுத்தியுள்ளார் ,, ஸ்ரீதர் வாண்டையார் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளர் தனது பிஸியான பிரச்சாரத்திற்கு இடையிலும் பாமக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய ஸ்ரீதர் வாண்டையார் வந்ததன் பின்னணி அதிரவைக்கிறது.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியது பாமாவிற்கு திமுக கூட்டணியை காட்டிலும் வட மாவட்டங்களில் அதிக முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது, இதை மற்ற சமூகங்களுக்கு எதிரான முன்னெடுப்பாக மாற்றி பிரச்சாரம் செய்து பாமகவை வீழ்த்த எதிர் கட்சிகள் தொடர்ந்து முயற்சித்து வந்தனர்.

இந்நிலையில்தான் பாமக வேட்பாளர் பாலு அனைத்து தரப்பையும் அரவணைத்து செல்வதை குறிப்பிடும் விதமாகவும், தான் வெற்றி பெற்றால் பொதுவான நபராக ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தில் வெற்றி பெற்று சேவை செய்வேன் என குறிப்பிடும் விதமாக ஸ்ரீதர் வாண்டையாரை தனக்கு ஆதரவாக மீன் சுருட்டி பகுதியில் பிரச்சாரம் செய்ய வைத்துள்ளார்.

தொடர்ந்து பாமாகவிற்கு எதிராக விதைக்கப்பட்ட பொய் பரப்புரைகளை வீழ்த்தி, அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லும் வேட்பாளார் என தொகுதி மக்களிடையே நிரூபித்துள்ளார் பாலு, சமூகங்கள் இடையே மன கசப்பை உண்டாக்கி அதன் மூலம் வெற்றி பெறலாம் என கணக்கு போட்டு இருந்த எதிர் கட்சிகளை அவர்கள் பாணியிலேயே அதிரடியாக வெற்றி கண்டுள்ளார்.

தானும்,ஸ்ரீதர் வாண்டையாரும் சட்டமன்றத்தில் அருகருகே அமர்ந்து தங்கள் தொகுதி மக்களின் குறைகளை தீர்த்து வைப்போம் எனவும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு குறிப்பிட்டு பேசினார்.