Politics

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக பிரச்சாரம் செய்து சிக்கலில் சிக்கிய முக ஸ்டாலின் !!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக பிரச்சாரம் செய்து சிக்கலில் சிக்கிய முக ஸ்டாலின் !!
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக பிரச்சாரம் செய்து சிக்கலில் சிக்கிய முக ஸ்டாலின் !!

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்றைய தினம் ராஜபாளையத்தில் திமுக பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் அப்போது பேசியவர்.. ராஜேந்திர பாலாஜி தினமும் மைக்கை பார்த்தால் ஏதாவது உளறுவது என குறிப்பிட்டு தனது பிரச்சாரத்தை ராஜபாளையத்தில் தொடங்கினார்.


மேலும் மத்திய மாநில அரசுகள் குறிப்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி என பலரையும் விமர்சனம் செய்திருந்தார் ஸ்டாலின்.. குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன சாதனைகள் செய்ய போகிறோம் என பட்டியல் இட்டார்.

இங்குதான் வகையாக சிக்கியுள்ளார் திமுக தலைவர் உண்மையில் இந்திய அரசியல்வாதிகளிலே அதிகம் உளறிய நபர் ஸ்டாலின் தான் என குறிப்பிட்டு இதுவரை அவர் அனிதாவை சரிதா என்றது, ஜப்பான் துணை முதல்வர் என்றது, பூனை மேலை மதில் என்றது என அடுக்கி கொண்டே ஸ்டாலின் உளறிய உளறல்களை பட்டியலிட்டு வருகின்றனர்.

அது ஒரு புறம் இருக்க திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன சாதனை நடக்கும் என, சில தகவல்களை குறிப்பிட்டுள்ளனர் அதில் ஓசி பிரியாணி கேட்டு ஓட்டலில் தாக்குதல் நடத்துதல், பியூட்டி பார்லரில் நுழைந்து திமுக பிரதிநிதி பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது, ஏன் ஓடும் மெட்ரோ ரயிலில் தனது அருகே புகைப்படம் எடுக்க வந்த இளைஞரை ஸ்டாலின் கண்ணத்தில் அறைந்தது உள்ளிட்ட பல நிகழ்கால சம்பவங்களை அடுக்கி கொண்டே போகின்றனர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்ன செய்தார் என ராஜபாளையத்தில் கேட்கும் ஸ்டாலின் ஒன்றை மறந்துவிட்டார், பல ஆண்டுகளாக தொகுதி மக்களின் கோரிக்கையான ரயில்வே மேம் பாலத்தை அமைச்சர் என்ற முறையில் கொண்டுவந்தது ராஜேந்திர பாலாஜிதான்.. பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவந்தது ராஜேந்திர பாலாஜிதான் ஏன் தொகுதியில் ஸ்டாலின் நின்று பிரச்சாரம் செய்த சாலைகளை சீராமைத்தது முதல் என்னென்ற பணிகளை பட்டியலிடுகின்றனர் தொகுதி மக்கள்.

மேலும் ஸ்டாலின் ராஜேந்திர பாலாஜி என்ன செய்தார் என கேட்கிறாரே, இதே ராஜபாளையம் தொகுதியில் திமுக சிட்டிங் எம்எல்ஏ வாக 5 ஆண்டுகள் இருந்த தங்கபாண்டியன் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என பட்டியல் போட வேண்டியது தானே எனவும் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர்,

திமுக mla தங்கபாண்டியனே கடந்த 30 ஆண்டுகளாக இந்த ராஜபாளையம் பகுதிக்கு யாரும் நல்லது செய்யவில்லை என கூறியிருக்கிறார் இதே ஆண்டுகளில்தான் கருணாநிதி முதல்வராகவும், ஸ்டாலின் துணை முதல்வராகவும் இருந்தனர் அப்படி என்றால் ராஜபாளையம் தொகுதிக்கு ஸ்டாலினும் கருணாநிதியும் எதுவும் செய்யவில்லை என திமுக MLA தங்கபாண்டியனே ஒத்துக்கொண்டுள்ளார் இதை ராஜபாளையம் மக்கள் மறக்க மாட்டோம் எனவும் தொகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மற்ற பகுதிகளை போலவே ராஜபாளையம் மக்கள் பார்வையில் உண்மையான உளறல் அரசியல் வாதியாக ஸ்டாலின்தான் இருக்கிறார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.