Tamilnadu

மாரிதாசிற்கு "சூசகமாக" பானுகோம்ஸ் தெரிவித்த கருத்து புறம்தள்ள வேண்டும் ..!

maridhas, banugomes, annamalai
maridhas, banugomes, annamalai

அரசியல் பார்வையாளர் பானு கோம்ஸ் இன்று தனது கருத்துக்களை சூசகமாக குறிப்பிட்டு இருக்கிறார், அரசியலில் ஆதரவு வட்டம் மிகவும் முக்கியம் எனவும் அரசியலில் விமர்சனங்கள், கோபங்கள் விருப்பு வெறுப்பு போன்றவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு தேவை படுவதை மட்டும் எடுத்து கொள்ளவேண்டும்  மற்றவற்றை புறம்தள்ள வேண்டும் என மாரிதாஸ் விவகாரத்தை சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.


நேற்றைய தினம் மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் வளர்ச்சி போன்றவை குறித்து மாரிதாஸ் விமர்சனம் வைத்து இருந்த நிலையில் பானு கோம்ஸ் இவ்வாறு பதிவிட்டுள்ளார் பானு கோம்ஸ் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-

அரசியலில் கட்சிக்கென  எக்கோ சிஸ்டம் உருவாக வேண்டும் & உருவாக்க வேண்டும் என்பது விருப்பம் எனில், அந்த எண்ணம் செயல்பாட்டு தளத்திற்கு வரும்போது ஆதரவாளர்களின் விமர்சனங்கள், கோபங்கள், புகார்கள்இன்ன பிறவற்றின் மீது கடுங்கோபம் கொண்டு பதில் விமர்சனம் செய்யாமல் வேண்டுவனவற்றை எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றை புறம் தள்ளிஎந்த நிலையிலும் ஆதரவாளரை அந்நியப்படுத்தி விடாமல் நகர்ந்து செல்லும் கவனம் /லாவகம் தேவை.

அரசியல் களத்தில் பயனற்ற மனிதர்கள் என்று யாரும் இல்லை !! அதனால் தான்...முதல் நாள்  இரவு வரை மிகக் கடுமையான எதிர் நிலையில் இருந்த மனிதர்கள் மறுநாள் காலை ..தங்களை நாடி வரும்போது ..வரவேற்று உள் அழைத்துக் கொள்கின்றன அரசியல் கட்சிகள்.கடுமையாக எதிர்த்தவர்களுக்கே கூட அரவணைப்பு உண்டுஎனும்போது ஆதரவாளர்களுக்கு கூடுதல் கரிசனம் அவசியம்.

அரசியல் கட்சிகளுக்கான & அரசியல் சித்தாந்தங்களுக்கான  எக்கோ சிஸ்டம் உருவாகும் அடிப்படை இதுவே பொது மக்களுடனான தொடர்பில் அரசியல் கட்சிகளால் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடங்களை எளிதில் நெருங்கி இட்டு நிரப்பும்  பணியை செய்வது அவரவருக்கான இந்த எக்கோ சிஸ்டம் தான் என பானு கோம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.