Politics

இரவோடு இரவாக ராஜபாளையத்தில் நடந்த அதிரடி மாற்றம்! முடிவை மாற்றிய முக்கிய சம்பவம்!!!

இரவோடு இரவாக ராஜபாளையத்தில் நடந்த அதிரடி மாற்றம்! முடிவை மாற்றிய முக்கிய சம்பவம்!!!
இரவோடு இரவாக ராஜபாளையத்தில் நடந்த அதிரடி மாற்றம்! முடிவை மாற்றிய முக்கிய சம்பவம்!!!

தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்து யாருடைய ஆட்சி நடைபெறும் என்ற கேள்வி அனைத்து மக்கள் மனதிலும் எழுந்துள்ளது, மீண்டும் ஆட்சிக்கு யார் வருவார்கள் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க நட்சத்திர தொகுதியான இராஜபாளையம் தொகுதியில் இரவோடு இரவாக அதிரடி மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், தொகுதி மக்களின் மனநிலையை கனிப்பது சற்று கடினமான விஷயமாக இருந்தது, ஆனால் இரவோடு இரவாக தொகுதி நிலவரம் 100% அதிமுகவிற்கு ஆதரவாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது.

ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், திமுக சார்பில் தங்கபாண்டியனும் போட்டியிடுக்கின்றனர், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி குறித்து வெளியான பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் தொகுதியில் இழுபறி நீடிப்பதாகவும், இரண்டு கட்சிகளுக்கு இடையேயான வாக்கு 5 ஆயிரத்திற்கு குறைவாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது.

ஆனால் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முழுமையாக களத்தில் இறங்கி பணியாற்றியது, நிர்வாகிகளை முறையாக கையாண்டது, தனது பிரச்சாரம் அனைத்து ராஜபாளையம் மக்களுக்கும் செல்லவேண்டும் என சமூக ஊடகங்களை முறையாக கையாண்டது என பல அமைச்சர் மேற்கொண்ட அதிரடி பிரச்சார வியூகங்கள்.

அமைச்சருக்கு முறையாக கைக்கொடுத்துள்ளன, மேலும் ராஜபாளையமே எனது ராஜ ஆலயம் என  தீவிரமாக பணியாற்றி வருகிறார், அதிமுகவினர் செல்லாத இடங்களே தொகுதியில் இல்லை என்ற நிலை கடந்த மூன்று நாட்களில் அரங்கேறியுள்ளது தெளிவாக ராஜபாளையம் பகுதியில் தெரியவந்துள்ளது.

தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே மீதமுள்ள நிலையில் திமுகவினர் தோல்வியை ஒப்புக்கொண்டது போல வீட்டில் முடங்கி இருப்பது, அதிமுகவின் வெற்றியை ராஜபாளையத்தில் மீண்டும் அரங்கேற உறுதுணையாக அமைந்துள்ளது, அமைச்சர் தொகுதி என்பதால் வெற்றி பெற்றால் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை தொகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையம் தொகுதியை பொறுத்தமட்டில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறைந்தது 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதில் எந்த மாற்றும் இல்லை என அடித்து கூறலாம்.