Tamilnadu

வாயை கொடுத்த சீமான் "வா பார்க்கலாம்" வெளுத்து எடுத்த கருப்பு முருகானந்தம் !

Seeman, karuppu muruganantham
Seeman, karuppu muruganantham

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பாஜகவிற்கு எச்சரிக்கை ஒன்றை கொடுத்து இருந்தார் அதற்கு பதிலடியாக பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தைரியம் இருந்தால் வர சொல்லுங்கள் பார்க்கலாம் என செய்தியாளர்கள் மத்தியில் எச்சரிக்கை விடுத்தது  பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.


சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக்கூடாதெனக் கூறியதால், திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமானப் போக்குகளை இனியும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது என பேசிய சீமான் .

பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமக் கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அறச்சீற்றத்தோடு முன்வைத்த அண்ணன் ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அக்கருத்துக்குப் பக்கபலமாகத் துணைநிற்கிறது ஆ.ராசாவை குறிவைத்து, மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என சீமான் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்ததிடம் செய்தியாளர் சீமான் எச்சரிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்கள் அதற்கு, சீமான் எங்களை என்ன பண்ணிடுவார், ஆ. ராசா கருத்திற்கு எதிராக நாங்கள் இருக்கிறோம் அவரால் ஒரு ஊரில் ஏதாவது செய்து பார்க்கட்டும் அப்படியெல்லாம் ஒன்றும் செய்துவிட முடியாது என தெரிவித்தார் கருப்பு முருகானந்தம்.

வாய் நிறையை எச்சரிக்கை விடுத்த சீமானை ஒரு ஊரில் வந்து செஞ்சு காட்டட்டும் என ஒரே வார்த்தையில் முடித்து விட்டார் கருப்பு முருகானந்தம்.கருப்பு முருகானந்தம் விநாயகர் சதுர்த்தி அன்று பேசிய பேச்சு.