Tamilnadu

வெளியான பரபரப்பு தகவல்.... பெட்ரோல் குண்டு வீச்சில் பிடிபட்ட கருக்கா வினோத்திற்கு நெருங்கிய பெண் செய்த வேலை அம்பலம்!

R.N.Ravi
R.N.Ravi

ஆளுநர் மாளிகை என்பது எப்பொழுதுமே ஒரு பரபரப்பான மற்றும் பாதுகாப்பு நிறைந்த ஒரு இடமாகும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள் வெளியாளர்களும் திடீரென்று ஆளுநர் மாளிகைக்குள் அனுமதிக்க முடியாது முன்பதிவு எடுத்த பிறகு தகுந்த கண்காணிப்பு மற்றும் சோதனைக்கு பிறகு அவர் ஆளுநர் மாளிகைக்குள் அனுமதிக்கப்படுவார். அப்படி இருக்கும் ஒரு இடத்தின் முக்கிய வாசல் முன்பே பெட்ரோல் குண்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் வெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு இருந்த பொழுதும் ஒரு இளைஞர் ஆளுநர் மாளிகையில் இருந்து அங்குமிங்கும் நடந்து பிறகு காவலர்கள் அசந்த நேரத்தில் மாளிகையை முன் வாசலிலேயே பெட்ரோல் குண்டு வீசி எரிந்துள்ளார் உடனடியாக சுதாரித்த போலீசார் தப்பி ஓடி அந்த இளைஞரை விரட்டிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர் அப்பொழுது அவர் ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. 


இதனை அடுத்து ஆளுநர் மாளிகைக்கு மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது அதுமட்டுமின்றி ஆளுநர் மத்திய அரசிற்கும் இது குறித்து அறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார், அதுமட்டுமின்றி இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கு என் ஐ ஏ அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டு கருக்கா வினோத்தும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதோட சமீபத்தில் கூட இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை என் ஐ ஏ தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கருக்கா வினோத்திற்கு நெருக்கமான 37 வயதான ஒரு பெண் குறித்து அதிகாரிகள் தகவல் அறிந்து அவரது வீட்டில் சோதனை இடும்பொழுது அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் அந்தப் பெண் விபச்சாரத்தில் இருந்து உள்ளார் என்பதும் பலரை இதுபோன்ற விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்துள்ளது. மேலும் இதில் பல பள்ளி மாணவிகளையும் ஈடுபடுத்தி உள்ளார் என்ற பரபரப்பான தகவல்களை பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

அதாவது, மாநில விபசார தடுப்பு பிரிவுக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட  வழக்கின் விசாரணையில், அந்த பெண் தன் மகளின் பள்ளித் தோழிகளிடம் நெருங்கிப் பழகி, நடனம் கற்றுத்தருவதாகவும், அழகுக் கலை கற்றுத்தருவதாகவும் ஆசை காட்டி அந்த குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி சீரழித்த அவலம் வெளிப்பட்டது. குறிப்பாக ஐதராபாத்,  கோவை போன்ற நகரங்களுக்கு அந்த பெண்களை அழைத்து சென்று கட்டாய விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூரம் நெஞ்சைப் பிழிகிறது. மேலும் அந்த  குழந்தைகளின் குடும்ப நிலைமையை தெரிந்து கொண்டு பண ஆசை காட்டியும், மறுத்தால் ஏ‌ற்கனவே ரகசியமாக எடுக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை பொது வெளியில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியும் விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.


இது வரை 7 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறு  குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய இ‌ந்த கொடூர கு‌ற்ற‌ம் மன்னிக்க முடியாதது. அந்த நபர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். அவசரகதியான உலகத்தில், பொருளீட்டும் நிர்ப்பந்தத்தில் இயந்திரம் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், தங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்  யாருடன் நட்பு கொண்டிருக்கிறார்கள் என அ‌றி‌ந்து கொள்ளாமலும், எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என தெரிந்து கொள்ளாமலும், தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை தொலைத்து கொண்டிருப்பது பெரும் துயரம் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.