Tamilnadu

இதற்குதான் காத்திருந்தேன் களமிறங்கிய H. ராஜா !

Thirumavalavan - H.Raja BJP
Thirumavalavan - H.Raja BJP

தனியார் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திருமாவளவன் பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை உண்டாக்கிய நிலையில் அவரது பேச்சிற்கு பதிலடி கொடுத்துள்ளார் H ராஜா.திருமாவளவன் நிகழ்ச்சியில் பேசியதாவது கபாலீஸ்வரர் கோவில்சென்னை சாந்தோமில் இருந்தது. அதனை இடித்துவிட்டுத் தான் அங்கே சாந்தோம் சர்ச் கட்டப்பட்டது. ஈசன் என்பது தான்ஏசு, Jesus என்றானது. 


சைவமும், வைணவமும் தமிழர்களால் ஏற்படுத்தப்பட்ட மதங்கள்; பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. தமிழர்களின் மதங்களான சைவத்தையும், வைணவத்தையும் இந்தியா முழுவதும் பரப்ப உண்டாக்கப்பட்ட மொழியே சமஸ்கிருதம். மேலும் திருவள்ளுவர் கிறிஸ்தவ மதத்தை தழுவினாரா என ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார் திருமாவளவன்.

இது கடும் சர்ச்சையை உண்டாக்கிய நிலையில் பாஜக மூத்த தலைவர் H.ராஜா திருமாவளவன் பேச்சிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில தகவல்களை குறிப்பிட்டார் அதில், நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்ற பழமொழி இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நானும் பல ஆண்டுகளாக  உண்மையான கபாலி கோவில் பற்றிய  The story of a Shiva Temple எனும் புத்தகம் பற்றி பேசவேண்டும் என்றிருந்தேன். திருமாவளவன் அவர்களே அதுபற்றி கூறியமைக்கு நன்றி. இது குறித்து விரிவாக பார்க்கலாம் கபாலி கோவில் பாடல் பெற்ற ஸ்தலம்.

கபாலி கோவிலில் மதில் சுவற்றில் கடலலைகள் வந்து மோதும் என்று பாடப்பட்டுள்ளது என குறிப்பிட்டார் அதாவது சாந்தோம் சர்ச் இருக்கும் இடம் கபாலி கோவில்தான் என உறுதி படுத்தியதற்கும் விவாதத்திற்கும் தயார் என்றும் அழைத்துள்ளார் H ராஜா.இனி உண்மையான கபாலீஸ்வரர் கோவில் வரலாற்றை H ராஜா எடுத்து வைப்பார் என்றும் அதற்கு அச்சாரம் போட்டதே திருமாவளவனின் சர்ச்சையான பேச்சுதான் இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது.