Tamilnadu

பிரசன்னா மனைவியின் மர்ம மரணத்திற்கு உண்மையான காரணம் என்ன? கொலையா?

prasanna
prasanna

தி.மு.க செய்தி தொடர்பு இணைசெயலாளர் பிரசன்னா மனைவி தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகிய நிலையில் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது .


தி.மு.கவின் மேடை பேச்சாளர்களில் ஒருவராக விளங்குபவர் தமிழன் பிரசன்னா. குடும்பத்தகராறு காரணமாக சென்னை எருக்கங்சேரியில் உள்ள  வீட்டில் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க உடனடியாக தமிழன் பிரசன்னா வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் தற்போது கொடுங்கையூர் காவல்நிலையத்தில் பிரசன்னா உள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரசன்னா குறித்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆபாச வீடியோ ஒன்று வெளியான நிலையில் பல்வேறு குழப்பங்கள் கணவன் மனைவி இடையே தொடர்ந்து நடைபெற்று வந்ததாகவும், மேலும் பிரசன்னாவிற்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் எனவும் காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு நடைபெற்றது கொலையா தற்கொலையா என்ற தகவலை கண்டறிய வேண்டும் என கூறப்படுகிறது.

முழுமையான காரணம் வெளியாகும் முன்னரே தற்கொலை என வழக்கை மூடி மறைக்க முயல கூடாது என பலரும் சமூக வலைத்தளத்தில் வலியுறுத்து வருகின்றனர், அதே நேரத்தில் தீவிர குடி பழக்கம் கொண்ட பிரசன்னா மனைவியை துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டினாரா? அல்லது அவரே கொலை செய்தாரா என்ற தகவல் தற்போது திமுக ஆட்சி நடைபெறுவதால் முழுமையாக நடைபெறுமா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.

தேசிய மகளிர் ஆணையம் உடனடியாக பிரசன்னா மனைவி மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி உண்மையை வெளி உலகிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் கோரிக்கை வைக்க படுகிறது. பிரதமர் முதல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரை பல்வேறு தலைவர்கள் குறித்து தனிப்பட்ட முறையில் சர்ச்சையாக பேசிவந்த பிரசன்னாவிற்கு மனைவிyin மர்ம மரணம் இடியாய் இறங்கியுள்ளது, இனி திமுகவில் இருந்தும் பிரசன்னா வெளியேற்ற படலாம் எனவும் கூறப்படுகிறது.