Tamilnadu

திரைப்படத்தில் அரங்கேறுவது போன்று நிஜவாழ்க்கையில் நடந்த அதிசய சம்பவம் ஜோதிமணி எங்கே?

jothimani and dmk saravanan
jothimani and dmk saravanan

தமிழகத்தில் அரசியல் வாதிகள் தினம் மத்திய அரசிற்கு எதிராக ஒரு பொய்களை பரப்பும் வேலையில் திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விவரம் அறியா தொண்டர்கள் ஈடுபட்டால் அதில் ஏதோ கவன குறைபாடு இருக்கு என அறியலாம், ஆனால் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பதவியில் இருக்க கூடிய ஜோதிமணி பல்வேறு பொய் தகவல்களை பரப்பியுள்ளார்.


புதிய பாராளுமன்றம் கட்ட பல்லாயிரம் கோடி என பொய் சொல்லி சிக்கினார், தற்போது கொரோனா தடுப்பூசி குறித்து கடந்த காலத்தில் ஜோதிமணி தெரிவித்த கருத்தும் தற்போது நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்ற தகவலும் ஜோதிமணி உட்பட குற்றம் சுமத்திய அனைவருக்கும் திரைப்படத்தில் வருவது போன்று பதிலடியாக அமைந்துள்ளது.

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தடுப்பூசிகளை இந்தியாவிலேயே தயாரித்து இந்திய மக்களுக்கு இலவசமாக வழங்கியது, அப்போது எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், கருத்து என்ற பெயரில் தெரிவித்த சிலவற்றை பார்க்கலாம். காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த காலத்தில் :- தமிழகத்திற்கு மட்டும் குறைந்தபட்சம் 14 கோடி தடுப்பூசிகள் தேவை. 1 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இந்தியா முழுவதும் 200 கோடி தேவை. 3வது அலையை வேறு எதிர்நோக்கியுள்ளோம். மோடி அரசு இவ்வளவு மெதுவாக தடுப்பூசி போட்டால் எப்போது போட்டு முடிப்பது?மக்கள் தொகை இத்தாலி -6.கோடி பிரான்ஸ் 6.7கோடி ஜெர்மனி -8.3 கோடி UK-6.7 கோடி இந்தியா- 130 கோடி.உலகிலேயே மிகக்குறைவாக தடுப்பூசி போட்டுள்ள நாடு இந்தியா தான்.

அந்த பெருமை மோடி அரசையே சாரும்.ஆனால் பொய் விளம்பரத்தைப் பாருங்கள். பிரதமர் மோடியும்,பிஜேபியும் , பொய்களும் பிரிக்கமுடியாதவை என மிகவும் ஆவேசமாக தெரிவித்து இருந்தார் அதாவது சொந்த நாட்டில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக ஒரு படி மேலே சென்று நாமே தடுப்பூசி தயாரித்த நிலையில் அதை பாராட்ட மனமில்லாமல் இதிலும் அரசியல் செய்து இருந்தார் ஜோதிமணி.

இவர் தவிர்த்து திமுக சார்பில் தன்னை அதிமேதாவியாக நினைத்து ஊடகங்களில் கடுமையாக உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவிப்பவர் சரவணன் இவரை கோட் சூட் சரவணன் எனவும் அழைப்பர், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில்  இந்திய தயாரிப்பு தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தபோது  அதனை கீழ்கண்டவாறு விமர்சனம் செய்தார் 1972 முதல் போலியோ சொட்டு

மருந்தை தமிழகம் முழுதும் இலவசமாக அளித்து 1983ஆம் ஆண்டே தமிழகத்தை போலியோ இல்லாத மாநிலமாக்கி சாதனை படைத்தவர் தலைவர் கலைஞர். எப்போ வருமென்றே தெரியாத கொரோனா தடுப்பூசியை இலவசமாக கொடுப்போம் என்பது என்ன வகை அரசியல்? தடுப்பூசி  வரும்பொழுது திமுக ஆட்சியில் என குறிப்பிட்டார்.இவர்கள் இருவரை போல பலர் இந்திய தயாரிப்பு தடுப்பூசியை கிண்டல் செய்ததுடன், அதில் அரசியலும் செய்து வந்தனர், இவர்கள் அனைவருக்கும் வாயால் பதில் சொன்னால் பத்தாது என செயலில் செய்து காட்டியுள்ளார் பிரதமர் மோடி, தற்போது இந்தியா முழுவதும் 100 கோடிக்கு அதிகமான கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.


அதாவது சூரிய வம்சம் திரைப்படத்தில் ஒரே பாடலில் பணக்காரனாக மாறுவார்கள், ஆனால் அதே போன்று இந்தியர்கள் அனைவரையும் கொரோனாவில் இருந்து காக்க முழுக்க முழுக்க 100% மத்திய அரசே கொரோனா தடுப்பூசிக்கான செலவை ஏற்று, வெற்றிகரமாக வல்லரசு நாடுகள் கூட நினைத்து பார்க்க முடியாத சாதனையை செய்துள்ளது, 1 கோடி தடுப்பூசிதான் போட்டு இருக்கிறார்கள் பொய் பரப்புகிறார்கள் என பதிவிட்ட ஜோதிமணிக்கும், இல்லாத தடுப்பூசியை இலவசமாக போடுவார்களா நம்பணுமாம் என பேசிய சரவணன் போன்றோருக்கும் நிஜ வாழ்க்கையில் நிஜ சூரிய வம்சத்தை சேர்ந்தவன் என நிரூபித்துள்ளார் பிரதமர் மோடி.

அன்று இந்தியாவின் கொரோனா தடுப்பூசி குறித்து கிண்டல் செய்தவர்கள் எல்லாம் இப்போது முதல் டோஸ் தடுப்பூசி போட்டுவிட்டு இரண்டாவது தவணைக்காக காத்து இருக்கின்றனர்.  திரைப்படத்தில் வருவது போன்று நம்ப முடியாத காட்சிகளை நிஜ வாழ்க்கையில் செய்து அசத்தியுள்ளார் பிரதமர்.