Tamilnadu

"பலமுறை பலவிதமாக சொல்லி பாத்துட்டேன்" திருந்தல அதான் இப்படி கிழித்து எடுத்த "H.ராஜா" !!

hraja
hraja

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான H.ராஜா சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் இதில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நாய் குரைக்கிறது என கூறியது, கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாடு மற்றும் காஞ்சிபுரம் ஆண்டர்சன் கோவிலில் திருநீர் ருத்ராட்சம் ஆகியவை அணிந்து வந்ததால் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் ஆகியவை குறித்து பதிலளித்தார்.


அமைச்சர் சேகர் பாபு  எதையோ பார்த்து நாய் குரைக்கிறது என கூறியுள்ளார், திருடனை பார்த்தால் நாய் குரைக்காதான் செய்யும், இனி தனி மனித தாக்குதல் தொடர்ந்தால் சேகர்பாபு குறித்து கொள்ளை தகவல்கள் வைத்துள்ளதாகவும், அனைத்தையும் வெளியிடுவேன் என H.ராஜா தெரிவித்துள்ளார்.மேலும் பேசியவர் காஞ்சிபுரம் ஆண்டர்சன் எனும் பள்ளியில் திருநீறு மற்றும் ருட்ராட்சம் அணிந்து சென்ற மாணவனை ஆசிரியர் ஜாய்சன் அடித்துள்ளார் .

அடித்ததோடு மட்டுமல்லாமல் மாணவர்களை கொண்டு கொட்ட செய்துள்ளார் இது எத்தனை அநாகரீகமான செயல் இதை செய்த ஆசிரியரை சஸ்பென்ட் செய்யவேண்டும் முதல்வர் தனி பிரிவில் தாயாரே புகார் கொடுத்துள்ளார் முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் அப்படியில்லை என்றால் பொது இடத்தில் வைத்து தவறு செய்த ஆசிரியரை அவர் கொடுத்த தண்டனை போல் தலையில் மாணவர்களை கொண்டு கொட்ட வேண்டும் என ஆதங்கத்தை தெரிவித்தார்.

ஏன் தமிழக ஊடகங்கள் இவற்றையெல்லாம் விவாதம் நடத்துவது இல்லை, இதுவே ஒரு பள்ளியில் இந்து ஆசிரியர் சிலுவை குறித்து ஏதாவது கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும், நானும் பலமுறை பல விதமாக ஊடகங்களை கேள்வி கேட்டுவிட்டேன்  எனவும் இந்த முறை நடப்பதை பார்ப்போம் எனவும் H ராஜா கிழி கிழி என ஊடகங்களின் இரட்டை நிலைப்பாட்டை கிழித்து எடுத்தார்.

இதுகுறித்து H.ராஜா பேசிய வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.