Tamilnadu

என்ன "கருமம்" இது கொளத்தூர் மணி? வீடியோ வைரல் இது தான் பெரியாரிய கொள்கையா?

kolathoor mani
kolathoor mani

பெரியாரிஸ்ட் கொளத்தூர் மணி மீது ப்ரான்ஸ் நாட்டை சேர்ந்த சக பெரியாரிஸ்ட் தமிழச்சி என்பவர் பெரும் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார், கொளத்தூர் மணி குற்றவாளிகளை காப்பாற்றுவதாகவும் பெரியாரிய கொள்கையில் ஈடுபாடு கொண்ட பெண்களை சக பெரியாரிஸ்ட் சரவணன் என்பவன் பயன்படுத்தி கொண்டு அந்த பெண்களிடமே பணம் பெற்று மோசடி செய்வதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இதற்கு கொளத்தூர் மணியும் ஆதரவாக இருப்பதாகவும் குறிப்பிட்டு அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளார், ஏற்கனவே முறையற்ற உறவு குறித்து பெரியாரிஸ்ட் கொளத்தூர் மணி போன்றவர்கள் பஞ்சாயத்து செய்வதாக பலர் குற்றசாட்டு எழுப்பி இருந்தனர், இந்த சூழலில் ப்ரான்ஸ் நாட்டில் இருந்து நேரடியாக தமிழகம் வந்து கொளத்தூர் மணியின் அலுவலகம் எதிரேயே பெண் ஒருவர் குற்றசாட்டு குறிப்பிட்டுள்ளது பெரியாரிஸ்ட்கள் மீதான சந்தேகத்தை உண்டாக்கியுள்ளது.

பெரியாரிய கொள்கை என்ற பெயரில் ஏதும் அறியாத பெண்களை பலர் தங்களது ஆசைக்கு பயன்படுத்தி கொள்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது, பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நின்று தமிழக அரசு குழு அமைத்து பெண்களின் புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் இது போன்ற நபர்களை சிறையில் தள்ளவேண்டும் எனவும் பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்து மத தலைவர்கள் மீதோ அல்லது எதிர்க்கட்சியை சார்ந்த அரசியல் தலைவர்கள் மீதோ இது போன்ற ஒரு புகார் கொடுக்கப்பட்டு இருந்தால் இப்போது இதே அரசாங்கமும் ஆளும் கட்சியும், பெரியாரிஸ்ட்களும் எது போன்ற ஒரு முன்னெடுப்பை எடுத்து இருப்பார்கள் ஆனால் ஒரு பெரியாரிஸ்ட் அமைப்பை சேர்ந்தவர் மீது அதே கொள்கை கொண்ட பெண் ஆதாரங்கள் இருப்பதாக பொது வெளியில் வீடியோ வெளியிட்ட பின்பும் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் பெண்ணியவாதிகள் தொடங்கிபலரும் அமைதியாக இருப்பது பலரது இரட்டைமுகத்தை வெளி காட்டியுள்ளது.

விரைவில் கொளத்தூர் மணி மீது புகார் அளித்துள்ள பெண்ணிற்கு ஆதரவாக பெண்ணியவாதிகள் களத்தில் இறங்கி பெரியாரிஸ்ட் அமைப்பை சேர்ந்த பலர் இளம்பெண்களை ஏமற்றிய சம்பவம் குறித்து வெளி உலகிற்கு கொண்டுவருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ப்ரான்ஸ் தமிழச்சி வெளிப்படுத்திய குற்றசாட்டு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.