Tamilnadu

திருமாவளவனை அருகில் வைத்துக்கொண்டு அவன் இவன் என ஒருமையில் பேசிய செந்தில் ஊடகத்துறையினர் அதிர்ச்சி !

senthilvel
senthilvel

திருமாவளவன் தலைமையில் நடந்த நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது , இதில் முத்தரசன்  , சுபவீ ,ஜோதிமணி ,விசிக பிரமுகர்கள் மற்றும் செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர் ,விழா முழுவதும் திருமாவளவனை குஷிப்படுத்த பலரும் புகழந்து பேசிய வண்ணம் இருந்தனர் , இந்த நிலையில்தான் மைக்கை பிடித்தார் செந்தில் .


மைக்கை பிடித்தவர் திருமாவளவன் மீது சீமானுக்கு என்ன திடீர் பாசம் , காவல்துறை நடவடிக்கை குறித்து வேடிக்கை பார்க்கலாமா என சீமான் சொல்கிறார் அவருக்கு தெரியும்டா  என்ன செய்யவேண்டும் என அவருக்கு தெரியும் நீ பொத்திகிட்டு இரு என மிகவும் முகம் சுளிக்கும் வகையில் பேசினார் , எடப்பாடியை சித்தப்பான்னு சொல்றது ,a2 குற்றவாளியை போய் சந்தித்துவிட்டு வரும் நீ அறிவுரை சொல்லலாமா திருமா ஒரு சமூகப்போராளி என குறிப்பிட்டார் .

விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காட்டிலும் அதிகமாக புகழ்ந்து தள்ளிய செந்தில் போன முறை நியூஸ் 18 தொலைக்காட்சியில் வேலை செய்தபோது நிர்வாகத்திடம் திருமா பிறந்தநாள் விழாவிற்கு செல்ல அனுமதி கேட்டேன் அவர்கள் மறுத்துவிட்டார்கள் ,ஏன் என்று கேட்டால்  இன்று விசிக கூட்டத்திற்கு போனால் நாளை ராமகோபாலன் நிகழ்ச்சிக்கு போவீர்களா ? என கேட்டு மறுத்து விட்டார்கள் ஆனால் அதே கூட்டத்தில் துளியும் திருமா சிந்தனைக்கு ஒப்பு இல்லாத ஒருவர் பேசிவிட்டு செல்கிறார் .

அத்துடன் சாதி வெறியர்கள் எனவும் இன்னும் பல தகவல்களை சொன்னார் செந்தில் , இந்த சூழலில் செந்திலின் பேச்சு ஊடகத்துறையினர் இடையே கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது , அரசியல் கட்சி தலைவர் கூட்டத்தில் பங்கேற்றது மட்டுமல்லாமல் ஒருமையில் பேசியதும் ஒரு சார்பாக பேசியுள்ளதும் கடும் எதிர்வினையை உண்டாகியுள்ளது , இதே செந்தில் இரண்டு நாளைக்கு முன்னர் எச் ராஜா ஊடகத்துறையினரை  ஒருமையில் தவறாக பேசிவிட்டார் என நியாயம் கேட்டு விவாதம் நடத்தியவர் என்பது செந்திலின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியுள்ளது .

அதிலும் திமுக கட்சி அலுவலகமான அறிவாலய வாசலில் உட்கார்ந்து இருப்பது தவறு இல்லை என செந்தில் பேசியதும் ,பாஜக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருமாவளவனிடம் பேரம் பேசியதாகவும் ,மத்திய அமைச்சர் பதவி  கொடுக்க முயன்றதாகவும் பாஜகவினருக்கே தெரியாத தகவலை அள்ளி தெளித்து விட்டார் செந்தில் , ஊடகவியலாளர் என்ற நிலையில் இருந்து இறங்கி  டப்பிங் நடிகராக மாறிய செந்தில் இப்போது மேடை யில் மூன்றாம் தர பேச்சாளர்களை போல ஒருமையில் பேசும் நிலைக்கு தரம் தாழ்ந்து வந்திருப்பது அவரின் செல்வாக்கு என்ன என்பதை நிரூபித்து வருகிறது . செந்தில் பேசிய வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் .