Tamilnadu

அந்த வார்த்தையை நீங்கதான் சொல்லவச்சீங்க வெளுத்து எடுத்த தமிழ்மணி வழக்கம்போல் பல்பு வாங்கிய செந்தில் !

tamilmani and senthil
tamilmani and senthil

நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்க கட்டுமானப் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த அணு உலைகளில் மின் உற்பத்தி 2023-24-ஆம் அண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர் .

இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றில் இது குறித்து விவாதம் ஒன்று நடைபெற்றது ,இதில் சிறப்பு அழைப்பாளர்களாக  தமிழ்மணி , உதயகுமார் , திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் இந்த விவாதத்தை செந்தில் தொகுத்து வழங்கினார் ,வழக்கம்போல் மத்திய அரசிற்கு எதிராக கஉருவாக்கம் செய்ய முயன்ற செந்தில் , வழக்கறிஞர் தமிழ்மணி கொடுத்த பதிலால் வாய்மூடி கிடந்தார் .

தமிழக மக்கள் வாக்கு அளிக்காத காரணத்தால்தான் மக்கள்  மீது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களோ என மறைமுகமாக பாஜகவை குற்றம் சுமத்தினார் செந்தில் , அதற்கு தமிழ்மணி கொடுத்த பதில்தான் ஹைலைட் ,சம்பந்தப்பட்ட நபரே தேர்தலில் நின்றார் அவருக்கே மக்கள் வோட்டு போடவில்லையே என பதிலடி கொடுத்தார் அதாவது கூடங்குளம் போராளி என கூறிக்கொள்ளும் உதயகுமார் 

தேர்தலில் நின்று டெபாசிட் வாங்காமல் தேர்தலில் தோற்றவரை பக்கத்தில்  வைத்து கொண்டே தெரிவித்தார் தமிழ்மணி .நான் அந்த வார்த்தையை சொல்ல கூடாது என நினைத்தேன் நீங்கள் சொல்லவைத்துவிடீர்கள் என செந்தில் பக்கமே கோல் போட்டார் தமிழ்மணி , மத்திய பாஜக அரசு மீது குற்றம் சுமத்த செந்தில் ஒரு வழியை தேர்ந்து எடுத்தால் அதே வழியை பயன்படுத்தி பதிலடி கொடுத்தார்  தமிழ்மணி இந்த விடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.

 .

அதோடு விவாதத்தின் வேறொரு பகுதியில் எனக்கு புரியவில்லை சார் தெளிவு படுத்துங்கள் என கூறினார் செந்தில் உங்களுக்கு புரிந்து ஒன்னும் ஆகப்போறது இல்லை மக்களுக்குத்தான் புரியவேண்டும் என வெளுத்து எடுத்தார் ,மக்களுக்கு நன்றாக புரியும் சார் அவர்கள் விவரமானவர்கள் என செந்தில் தெரிவிக்க அப்போ எதுக்கு விவாதம் என தமிழ்மணி கொடுத்த பதிலால் வழக்கம்போல் பல்பு வாங்கினார் செந்தில் .இந்த விடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.