Tamilnadu

என்னது இந்த பொருள்கள் எல்லாத்தையும் இனி விமானத்தில் எடுத்துட்டு போக கூடாதா? இதையும் சாப்பிடக்கூடாதா?

plane
plane

நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருப்பதுண்டு அதிலும் நாம் இதுவரை ஒரு வசதியை பெறவில்லை என்றாலும் அதை அடைந்து விட வேண்டும் என்ற ஒரு ஆசையும் அதனையே சில நேரங்களில் தமது கனவாகவும் சிலர் ஆக்கிக் கொள்வார்கள் எடுத்துக்காட்டாக வீடு கட்ட வேண்டும் என்ற ஒரு ஆசை சிலரது கனவாகவும் உள்ளது மேலும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதும் சிலரின் கனவாகவும் உள்ளது அப்படி பல நடுத்தர வர்க்கத்தினர்களின் மிக முக்கிய ஆசையாக இருக்கக்கூடிய ஒன்றுதான் ஆகாய விமானத்தில் ஏற வேண்டும் என்பது, இந்த ஆசை பலருக்கும் இருக்கத்தான் செய்யும் ஏனென்றால் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது நம் பெற்றோர்கள் ஏரோப்ளேன் போகுது பாரு என்று காட்டி இருப்பார்கள் அதேபோன்று நாமும் மற்ற சிறுவர்களுக்கு காட்டி மகிழ்ந்திருப்போம் அப்படி காட்டி மகிழ்கின்ற ஒரு விமானத்தில் நாம் என்று? ஏறி செல்வோம் என எதிர்பார்ப்பது என்பது பலரது ஆசைகளில் ஒன்று!.


அப்படிப்பட்ட விமானத்தில் செல்வது தற்போதயெல்லாம் மிகவும் எளிதாகிவிட்டது ஏனென்றால் முன்பு கூட விமானங்களில் டிக்கெட் புக் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவும் நீண்ட நாட்களுக்கு முன்பே புக் செய்து விட வேண்டும் என்ற ஒரு கட்டாயமும் இருந்து வந்தது ஆனால் தற்போதயெல்லாம் மிகவும் எளிதாகி விட்டது பலர் அவர்கள் வசிக்கும் மாநிலங்களுக்குள்ளே விமான சேவைகளை உபயோகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் முதல் தலைமுறையினர் அதிகமாகவும் தற்போது விமான சேவையை பயன்படுத்தி வருகிறார்கள் ஏன் சில பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களையும் விமானத்தில் ஏற்றி அவர்களின் கனவையும் நிறைவேற்றி வருகிறார்கள்.

அப்படி முதல்முறையாக நாம் விமானத்தில் ஏற போகிறோம் என்றால் நிச்சயமாகவே ஒரு குதூகலத்தில் நாம் திலைத்திருப்போம் அதோடு ஒரு பதட்டமும் நம்மிடம் இருக்கும் ஏனென்றால் டிக்கெட் எங்கு பெறுவது நம்முடைய பொருட்களை எங்கு வைப்பது நம்முடன் என்னென்ன பொருட்களை எடுத்துச் சொல்வது செக்கிங்கில் எவற்றையெல்லாம் நம் கையில் கொண்டு போக முடியும் நம்முடைய லக்கேஜ் எல்லாம் பத்திரமாக நம்மிடம் வந்து விடுமா! பறக்கும் போது எப்படி இருக்கும் ஏரோப்ளேன் தரையில் இருந்து மேலே செல்லும் பொழுது எப்படி இருக்கும் போகும் வழியில் ஏதேனும் நடந்து விடுமா மூச்சு திணறல் ஏற்படுமா என்ற பல கேள்விகள் நம்முள் எழுந்திருக்கும் சிலருக்கு அது வராமல் கூட இருக்கலாம் ஆனால் முதன்முறையாக விமானத்தில் ஏறும் பலருக்கு இந்த கேள்விகளில் ஏதேனும் ஒன்று இரண்டாவது எழாமல் இருந்திருக்காது! 

அந்த வகையில் தற்போது விமானத்தில் யாரேனும் பயணிக்க போகிறீர்கள் என்றால் என்னென்ன பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்லக்கூடாது என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது துபாய் செல்லும் பயணிகள் நிச்சயமாக சில பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடாது என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கண்டிஷன் போட்டுள்ளது, கோகோயின், ஹெராயின் மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள், வெற்றிலை, சில மூலிகைகள், காண்டாமிருகத்தின் கொம்பு, சூதாட்டக் கருவிகள், யானைத் தந்தம், புறக்கணிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள், அச்சிடப்பட்ட பொருட்கள், எண்ணெய் ஓவியங்கள், புகைப்படங்கள், கல் சிற்பங்கள், புத்தகங்கள் கூட எடுத்துச் செல்ல கூடாதாம்!!.

வீட்டில் சமைத்த உணவுகள், அசைவ உணவுகள், போலி நாணயம் போன்றவற்றை எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறப்படுகிறது மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  இதுமட்டுமின்றி பீட்டா மெத்தோல், ஆல்பா மெத்தில் பெனானில், கோடாக்சைம், கஞ்சா, பாப்பின் வைக்கோல் செறிவு, அபின், ஆக்சி கோடோன், கோடீன், ஆம்பெடமைன் போன்ற சில மருந்துகளையும் பயணத்தின் போது உட்கொள்ளக்கூடாது என்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவுறுத்தியுள்ளது.