Tamilnadu

இறந்தவரின் உடலை தன் தோள் மீது சுமந்து சென்ற அண்ணாமலை! தலைவா நீ வேற லெவல்!

Anathakrishnan
Anathakrishnan

பாரதிய ஜனதா கட்சியின் தர்மபுரி மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் திடீர் மறைவையொட்டி பாஜவினர்  தொடர்ந்து தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 


தொடர்ந்து தன்னுடைய சிறப்பான பணியை கட்சிக்காக செய்து வந்த அனந்தகிருஷ்ணன் நேற்று மாரடைப்பு  காரணமாக திடீரென மறைந்தார். இவரது மறைவு கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் குறித்த பல்வேறு நல்ல விஷயங்களை அவரவர் முகநூலில் பதிவிட்டு தங்களுடைய இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்வதற்காக மாநில தலைவர் அண்ணாமலை தருமபுரிக்கு நேராக சென்று அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் ஆதரவு தெரிவித்து, அனந்த கிருஷ்ணனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். 


பின் இறுதி அஞ்சலியின் போது பாஜக தலைவர் அண்ணாமலை, அனந்த கிருஷ்ணனின் உடலை சுமந்து சென்றார். இந்த புகைப்படம் சமுக வலைதளத்தில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது. ஒரு தலைவர் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்; தொண்டர் மறைந்தாலும் கட்சி பொறுப்பில் இருப்பவர் மறைந்தாலும் ஒரு தலைவனாக செய்யவேண்டிய விஷயத்தைத் தாண்டி தன்னுடைய குடும்ப உறுப்பினராக பாவித்து உள்ளார்.

இறந்தவரின் உடலை தன் தோள் மீது சுமந்து சென்ற அண்ணாமலை மக்கள் மத்தியில் அரசியல்வாதி என்ற ஒரு பிம்பத்தையும் தாண்டி நம்மில் ஒருவர்; நமக்காக இருப்பவர்; நமக்கு ஆதரவு கொடுப்பவர் என்ற நம்பிக்கையை தங்கள் தொண்டர்களுக்கு கொடுத்துள்ளார். மேலும் தலைவா நீங்க வேற லெவல் என பலரும் அண்ணாமலையை பற்றி விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். 

இதன் மூலம் அண்ணாமலை மாநில பாஜக தலைவர் மட்டுமல்ல; மிகச் சிறந்த மனிதர் என்ற உணவை பொதுமக்களுக்கும், எதிர்கட்சியினருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.