Politics

வைரலாகும் அண்ணாமலையின் மற்றொரு வீடியோ... காத்திருந்த முதல்வருக்கு பெரும் ஷாக்! காவல்துறைக்கே இந்த நிலைமையா?

annamalai.mkstalin
annamalai.mkstalin

தமிழகத்தில் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களே கொலை செய்யப்பட்டுள்ளனர்.தமிழக முதல்வர் ஸ்டாலினோ, வழக்கம் போல், 'நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சொல்லி, தன் பொறுப்பில் இருந்து கழன்று கொள்கிறார்.குற்றங்களை தடுக்க அப்படி என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கொடூர குற்றங்கள் என நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.


நாளுக்கு நாள் அதிகரிக்கும் குற்றங்களை தடுக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் தானே உள்ளது?காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் தானே, மாநிலத்தில் நிகழும் இக்குற்ற சம்பவங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்?அதை தடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்காமல், எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினால், 'கடந்த ஆட்சியில் இப்படி நிகழ்ந்தது, அந்த மாநிலத்தில் அப்படி நிகழ்ந்தது' என்று கதை கூறிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சென்னை 117-வது வார்டு தி.மு.க சார்பில் வேளச்சேரியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற இருந்தது. அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, வேளச்சேரி காவலர் காமராஜ் என்பவர் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகனை காவலர் காமராஜ் ஓரமாக போக சொன்னதாக தெரிகிறது. இதனால், மதுபோதையில் இருந்த தந்தை, மகன் காவலர் காமராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  தனது சமூக வலைதள பக்கத்தில், "சென்னை வேளச்சேரியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்ளவிருந்த விழாவில், போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்து கொண்டிருந்த காவலர் திரு. காமராஜ் என்பவரை, மது போதையில் இருந்த திமுகவினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

காவல்துறையினரை தாக்கும் அளவுக்க தி.மு.கவினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? ஏற்கனவே பெண் காவலர்கள் மீது பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் என தமிழகம் முழுவதும் பார்த்து வருகிறோம். அந்த குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல், காவல்துறையினரின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்பட்டதால், காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது. தற்போதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கியக் காரணம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதே. தற்போது, காவல்துறை மீதும் தொடரும் திமுகவினர் தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?" என்று  அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார்.