Tamilnadu

தமிழக மக்களுக்கு அழைப்பு புது முயற்சியில் இறங்கியுள்ள மாரிதாஸ் குவியும் அழைப்புகள்!

maridhas
maridhas

எழுத்தாளர் மாரிதாஸ் தமிழக மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் தனது கருத்துக்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு வருபவர், அவரது வீடியோக்கள் மற்றும் அதில் குறிப்பிடப்படும் தகவல்கள் பல நேரங்களில் மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளன.


குறிப்பாக தனியார் ஊடகம் ஒன்று குறித்து மாரிதாஸ் வீடியோ வெளியிட அது மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது பலரை நிர்வாகம் பணியில் இருந்து வெளியேற்றியது, சிலர் தாங்களாக வெளியேறினர் இது போன்று திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் குறித்து வீடியோ வெளியிட்டு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார் மாரிதாஸ்.

தற்போது சென்னையின் நிலை மிக மோசமாக இருக்கும் சூழலில், ஊடகங்கள் குறித்த தனது நிலைப்பாட்டையும், தமிழக மக்கள் என்ன செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார், இது குறித்து அவர் தெரிவித்துள்ள தகவல் பின்வருமாறு :-

உங்கள் பகுதியில் மழை நீர் தேங்கி அதனால் உருவாகியுள்ள மோசமான நிலையை ஒரு வீடியோவாக  உங்கள் தொலைப்பேசி மூலம் எடுத்துப் பேசி உங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு தயக்கம் என்றால் எங்கள் செய்திப் பிரிவைச் சார்ந்த Whatsapp (+91 93844 75034) எண்ணுக்கு அனுப்பி வைக்கவும்.

நீங்கள் உங்கள் பகுதி பிரச்சனையை வீடியோவாக அனுப்புங்கள் நாங்கள் அதனை அனைத்து தரப்பிலும் கொண்டு சேர்த்து உங்களுக்காகக் கேள்வி எழுப்புகிறோம்.

மீடியா மொத்தமும் திமுகவிற்கு ஜால்ரா போடுவதால் தமிழ் நாடே பாரிஸ் போல் குளிர்கிறது, மக்கள் நீச்சல் அடித்து ஜாலி, மக்கள் ஷாப்பிங்க் ஆர்வம் எனச் செய்தி போடும் அளவுக்கு இங்கே செய்தியாளர்களுக்குக் கூச்சம் இல்லை. எனவே மக்கள் போராட்டமாக சமூக வலைத்தளத்தை மாற்றுவோம் என அழைப்பு விடுத்துள்ளார் மாரிதாஸ்.

இதற்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவு அதிகரித்து வருவதாகவும் தங்கள் பகுதியில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்த தகவல்களை சொல்ல அழைப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.