India

மகாராஷ்டிரா வரை "எதிர்ப்பை" சந்தித்த ஸ்டாலின் கூட்டணி கட்சியே விமர்சனம்!

stalin
stalin

மகாராஷ்டிரா மாநில முதல்வராக சிவசேனா கட்சியை சேர்ந்த உத்தவ்தாக்கரே பதவி ஏற்ற போது ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தினார், இன்று அந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் ஸ்டாலின் செயல் கலாச்சாரத்திற்கு எதிரானது என விமர்சனம் செய்யும் சூழல் உண்டாகி இருக்கிறது.


முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த குற்றவாளி பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட் விடுவிப்பு செய்தது. பேரறிவாளனை தொலைபேசியிலும், நேரிலும் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் கட்டிப்பிடித்து வாழ்த்தினார். இதனை திமுகவினர் தங்களது தேர்தல் வாக்குறுதி வெற்றியாகவே போஸ்டர் ஒட்டி பெருமிதத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

 இது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், வாய் மூடி எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு அமைதி காத்து வருகிறது.இந்நிலையில், பேரறிவாளன் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சிவசேனா மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில்,

இதுபோன்ற விவகாரத்தில் சிலர் புதிய பரிணாமத்தை அளிப்பது. அது தேசத்திற்கு ஏற்றதாக கருதமுடியாது. அனைவருக்கும் தமிழகத்தின் அரசியல் பற்றி தெரியும். ராஜிவ் நம்முடைய தேசத்தின் தலைவர். அவர் தன்னையே தியாகம் செய்துள்ளார். அவர் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்.

ஒருவேளை, ராஜிவ் படுகொலையை வரவேற்பதாக ஸ்டாலின் கருதும்பட்சத்தில், என்னை பொறுத்தவரை, இது நம்முடைய கலாச்சாரம் இல்லை.'இவ்வாறு அவர் தெரிவித்தார். திமுகவின் அகில இந்திய கூட்டணியில் காங்கிரஸ் முக்கியமான கட்சி அதனுடன் இணைந்து ஆட்சியில் பங்கேற்ற சிவசேனாவே தமிழக முதல்வர் ஸ்டாலினின் செயலை விமர்சனம் செய்து இருப்பது கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது