Tamilnadu

ஏன் பாஜகவில் "இணைந்தீர்கள்" என்ற கேள்விக்கு ஒரே வரியில் மாஸ் பதில் கொடுத்த திமுக கவுன்சிலர்...!

Saraswathi mla
Saraswathi mla

வரியில் மாஸ் பதில் கொடுத்த திமுக கவுன்சிலர்...!"தமிழகம் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சியில் எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் இணைவது வழக்கம் " ஆனால் ஒருவர் ஆளும் கட்சியில் இருந்து விலகி எதிர் கட்சியில் இணைவது என்பது எப்போதாவது அரிதினும் அரிதாக நடைபெறுவது.


அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தை தொடர்ந்து மொடக்குறிச்சி பகுதியிலும் மாற்றம் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த கிளாம்பாடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 11 வார்டுகளிலும், அதிமுக, பாஜக தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் இரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

திமுக சார்பில் 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.சுரேஷ்குமார், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார்.

இந்நிகழ்ச்சியில், பாஜக ஒன்றிய தலைவர் சேகர், எஸ்.டி.செந்தில்குமார், கவுன்சிலர் ஜெகதாம்பாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பாஜகவில் இணைந்த டி.சுரேஷ்குமார் கூறும்போது, ‘நாட்டு நலனுக்கான கட்சியாக பாஜக விளங்குவதால், அக்கட்சியில் இணைகிறேன்’ என்றார். நாட்டு நலனை காக்கும் ஒரே இயக்கம் பாஜக என கவுன்சிலர் குறிப்பிட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.