Tamilnadu

குசும்பை பார்த்தீர்களா? பெரியார் வெடி..! வித்தியாசமா யோசித்த நெட்டிசன் அதிலும் கிளைமாக்ஸ் சூப்பர்!

periyar vedi
periyar vedi

நாளுக்கு நாள் நெட்டிசன்கள் அலப்பறைகள் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கின்றன, தங்கள் ஆதரவு எதிர்ப்பு என அனைத்தையும் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் ஆட்சியாளர்கள் கவனத்திற்கும் எடுத்து செல்கின்றனர்.


அந்த வகையில் நெட்டிசன் ஒருவர்பெரியார் வெடி என ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார், ஏற்கனவே படு தயாரிப்போடு இருந்திருக்கிறார் என்றே தெரிகிறது வேறு வெடியின் மீது பெரியார் புகைப்படத்தை 10 வருடத்திற்கு முன்பே வெடி வெடிப்பதை நிறுத்திவிட்டேன்ஆனால் பெரியாரிஸ்ட்கள் தீபாவளிக்கு

எதிராக தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் பெரியார் பாணியில் தன் சொந்த செலவில் வெடி வாங்கி அதில் பெரியார் புகைப்படத்தை ஒட்டி தயாரித்து வெடித்திருக்கிறேன் என அந்த வெடிக்கு பதில் கமெண்ட்கள் கிடைகின்றன.

இதைவிட கிளைமாக்ஸ் ஒன்று இருக்கிறது தீபாவளி அன்று செய்த பலகாரங்கள் இனிப்புகளை சாமிக்கு படையல் போட்டு படைப்பது வழக்கம், அதில் புதுமையாக யோசித்த நெட்டிசன் ஒருவர் ஊதுபத்தி ஸ்டாண்டி இல்லாத காரணத்தால்  இட்லியில் ஊதுபத்தியை சொருகி படையல் போட்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


தீபாவளிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த பெரியாரிஸ்ட்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நெட்டிசன்கள் பெரியார் வெடி ஒன்றையே உருவாக்கி வெடித்து இருப்பது பெரியாரிஸ்ட்கள் மத்தியில் புகைச்சலை உண்டாக்கியுள்ளது.வெடி வெடிக்காதீர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபடாதீர்கள் என சொன்ன பெரியாரையே வெடியாக வெடித்து கன்டென்ட் ஆக்கியுள்ளனர் நெட்டிசன்கள். வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.