
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேரள பாஜகவினர் இடையே மிக பெரியளவில் பிரபலமடைந்துவிட்டார் இது அனைத்தும் ஒரே நாளில் நடைபெற்றது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அதுதான் உண்மை, வேறு மாநிலமான கேரளாவிற்கு சென்று தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர் அண்ணாமலை கேரளாவில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் போடுகின்ற முதல் கையெழுத்து என்ன என்பது குறித்து தெளிவுப்படுத்தி இருக்கிறார் அதை அவரே குறிப்பிட்டும் இருக்கிறார்.
அண்ணாமலை அடுத்த மாநிலத்திலும் கால் வைத்து அசத்தி இருக்கிறார். நேற்று கேரளாவில கண்ணூர் மாவட்டம் தலசேரியில் சுமார் 15000 மக்கள் நேற்று ஜெயகிருஷ்ணன் மாஸ்டரின் 22 வது நினைவு நாளில் பேரணியாக சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பயங்கரவாத அரசியலை உலகிற்கு எடுத்து கூறினார்கள்.
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் பா னூர் அருகே உள்ள கூத்துபரம்பு என்கிற இடத்தில் மொகேரி ஈஸ்ட் யுபி ஸ்கூல் என்று ஒரு அரசு மேல் நிலைப்பள்ளி இருக்கிறது அந்த பள்ளியில் தான் கே.டி. ஜெயகிருஸ்ணன் ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளியில் அவரது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் கல்வியோடு தேசிய சிந்த னையையும் பெற்று வந்தார்கள். ஏனென்றால் ஜெயகிருஷ்ணன் கேரள மாநில பிஜேபியில்இளைஞரணியான யுவமோர்ச்சாவின்மாநில துணைத்தலைவராக பணியாற்றி வந்தார்.
ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து கொண்டு பிஜேபியில் ஜெயகிருஷ் ணன்இருந்தது. அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி கொண்டு இருந்தது 1999 ம் ஆண்டு டிசம்பர் 1 ம் தேதி காலை 10•35 என்று நினைக்கிறேன். அப்பொழு து ஜெயகிருஷ்ணன் 6 ம் வகுப்பு மாணவ ர்களுக்கு பாடம் எடுத்து கொண்டு இருந்தார்.அப்பொழுது 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று வகுப்பறையில் நுழைந்து அவரை சரமாரியாக வெட்டினார்கள்.
அவருடைய உடலில் மொத்தம் 48 இடங்களில் வெட்டு இருந்தது என்றால் அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரு க்கு எந்த அளவிற்கு கொலை வெறி இருந்து இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். பட்டப்பகலில் ஒரு அரசு பள்ளியில் ஆசி.ரியரை வெட்டிக்கொன்று விட்டு வகுப்பறையில் இருந்த கரும்பலகையில் இதை யாராவது வெளியில் கூறினால் அவர்களுக்கும் இதே கதி தான் என்று எழுதி11 வயது உடைய மாணவர்களை மிரட்டி சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காரல் மார்க்சையும் ஏங்கெல்சையும் இப்படியா அறிந்து கொண்டார்கள்?
ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் படு கொலையை நேரில் பார்த்த அந்த வகுப்பில் இரு ந்த 40 மாணவர்களில் பலர் மன நிலைபாதிக்கப்பட்டு அதற்கு பிறகு பள்ளிக்கு செல்லவேயில்லை என்பது எவ்வளவு வேதனையான விஷயம் தெரியுமா?
நாட்டையே உலுக்கிய ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் படுகொலையில் அப்போதைய முதல்வர் நாயனார் அமைதியாக இருக்க ஜெயகிருஷ்ணனின் தாயார் நீதி மன்றத்தை நாட பிஜேபியினர் வீதிகளில் இறங்கி போராட அதற்கு பிறகு பெயருக்கு கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட்கட்சியின் தலைவரான பிரதீபனை குற்றவாளியாக்கியது கேரள அரசு.
2001 ல் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு கொலையில் ஈடுபட்ட 7 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் கைது செய்யப்பட்டு அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்தது கேரள உயர் நீதி மன்றம். இந்த தீர்ப்பை அளித்த நீதிபதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோர்ட் வளாகத்தில் எப்படியெல்லாம் மிரட்டினார்கள் என்பதை நீங்கள் அறிந்தால் இடது சாரிகளிடம் ஜனநாயகம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காப்பாற்ற 2006 ல் மறுபடியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைந்த பிறகு பல கோடி ரூபாய்களை செவழித்து உச்ச நீதிமன்றத்தில் ராம்ஜெத்மிலானியை வாதாட வைத்து அவர்களை காப்பாற்றியது.
உச்ச நீதிமன்றமும் 5 பேர்களின் மரண தண்டனையை ரத்து செய்து ஒரே ஒருவ ருக்கு அதாவது பிரதிபனுக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கியது.இதை விட அதிர்ச்சி என்னவென்றால் அந்த பிரதிபனையும் 2011 பிப்ரவரியில் அப்பொழுது ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன் விடுதலை செய்து விட்டார்.
இதை விட மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் என்னவென்றால் 2016 ல் கேரளாவில் மீண்டும் இடது சாரிகளின் ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் பினராயி விஜயன் கே.டி ஜெய கிருஷ்ணன் மாஸ்டர் படுகொலை செய்யப்பட்ட அதே மொகேரி ஈஸ்ட் யுபி ஸ்கூலின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பிரதிபனை நியமித்து கௌரவித்தது.
பாருங்கள் ஒரு பள்ளியில் பணி புரிந்த ஒரு ஆசிரியரை அவர் ஒரு இந்துத்வாசிந்தனையாளர் என்பதற்காக அதே பள்ளியில் அவர் பாடம் நடத்திய வகுப்பறையி ல் மாணவர்கள் முன் அவரை வெட்டி படுகொலை செய்த ஒரு கொலைகாரனை அதே பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவராக நியமிக்கப்படுகிறார்என்றால் இமதுசாரிகளின் நிஜ முகத்தை அறிந்து கொள்ளலாம்.
நேற்று ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் சிவப்பு சிந்தனையாளர்களால் வெட்டி கொல்லபபட்ட 22 வது நினைவு நாள். இந்த பயங்கரத்தை உலகம் அறிந்து கொள்ள எத்தனை சிறுவர்கள் சிறுமிகள் மாணவர்கள் பெற்றோர்கள் என்று கட்சி பேதமின்றி தலசேரியில் பேரணியாக சென்று அச்சுலி செலுத்தியதை பார்க்கும் பொழுது மேற்கு வங்காளம் திரிபுரா மாதிரி கேரளாவிலும் இடதுசாரிகள் காணாமல் போவதை காலம் விரைவில் முடிவு செய்யும்
நேற்று ஜெயகிருஷ்ணன் மாஸ்டரின் நினைவு அஞ்சலி கூட்டத்தில் பேசிய அண்ணாமலை அவர்கள் காலம் ஒரு நாள் மாறும் அப்பொழுது கேரளாவில் பிஜேபி ஆட்சியில் அமரும். பிஜேபி ஆட்சி அமர்ந்த பிறகு பிஜேபி முதல்வர் போடும் முதல் கையெழுத்து எது தெரியுமா? ஜெயசந்திரன் மாஸ்டர் வேலை பார்த்த மொகேரி ஈஸ்ட் யுபி ஸ்கூல் அவருடைய பெயர் தாங்கி ஜெயசந்திரன் மாஸ்டர் கல்வி நிலையம் என்று பெயர் மாற்றப்படும் உத்தரவில் தான் கேரளாவின் முதல் பிஜேபி முதல்வரின் முதல் கையுழுத்தாக இருக்கும் என்று அண்ணாமலை அவர்கள் கூறிய பொழுது கூட்டத்தில் இருந்த சுமார் 15000 மக்கள் மட்டும் ஆர்ப்பரிக்கவில்லை கூடவே கேரளாவில் வாழும் சுமார் இர ண்டு கோடி இந்துக்களின் இதயங்களிலும் அண்ணாமலை குரல் எதிரொலிக்க தொடங்கிவிட்டது. credit - vijayakumar arunagiri
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.