Tamilnadu

கண்ணீர் விட்டு கதறும் சாட்டை துரைமுருகன் மனைவி..! பாஜக எவ்வளவோ மேல் வெளியான அதிர்ச்சி தகவல்!

duraimurugan wife
duraimurugan wife

தமிழகத்தில் உண்மையான பாசிசம் என்பது என்ன என்று திமுக காவல்துறை முடிவு செய்து களத்தில் இறங்கி மக்களுக்கு காட்டி வருவதாக பாஜக அதிமுக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் குற்றசாட்டு சுமத்தி வருகின்றனர். மாரிதாஸ் மீது பழைய வழக்குகளை கொண்டு மாறி மாறி சிறையில் அடைத்து கருத்துரிமையை சிதைக்கும் தமிழக காவல்துறை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகனை மீண்டும் சமூக வலைத்தள பதிவிற்காக கைது செய்து இருப்பது கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.


தனியார் ஆலையில் வழங்கப்பட்ட உணவின் காரணமாக பலர் மயக்கம் அடைந்து ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழலில் பெண்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த சூழலில் இது குறித்து பெண்கள் இறந்து விட்டதாக தவறான கருத்து பதிவிட்டாதாக கூறி துரைமுருகனை திருச்சி காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இது குறித்து கண்ணீருடன் சாட்டை துரைமுருகன் மனைவி மாதரசி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் அதில்..எனது கணவனை கண்டுபுடித்து கொடுங்கள். அவரை காணவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று புகார் அளித்தார் ஆனால் அவர் புகார் கொடுத்த மறு நிமிடத்தில் சாட்டை துரைமுருகன் கைது செய்யட்டு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் சாட்டை துரைமுருகன் கைதை பலர் கண்டித்து வருகின்றனர் நிச்சயம் இது திமுக அரசின் பழிவாங்கள் நடவடிக்கை, விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவன் இதே கருத்தை பதிவு செய்தார் அவரை இந்த அரசு கைது செய்யுமா? பாசிச ஆட்சி என திமுக குற்றம் சுமத்தும் பாஜக ஆட்சி நடத்தும் மாநிலங்களில் இப்படி எங்காவது நடைபெறுகிறதா? எத்தனை பேர் தமிழகத்தில் பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள் பாஜகவினரை விமர்சனம் செய்தார்கள் ஏன் துரைமுருகனே பலமுறை விமர்சனம் செய்தார் அவரை மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி கைது செய்ததா? உண்மையில் திமுக தான் உண்மையான பாசிச ஆட்சி நடத்துகிறார்கள் என சாட்டை துரைமுருகனுக்கு ஆதரவாக பலரும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர், நள்ளிரவில் சாட்டை துறைமுருகன் மனைவி கண்ணீர் விட்டு கதறிய காட்சிகள் பலரையும் வேதனைக்கு உள்ளக்கியுள்ளது.