Cinema

கில்லி படத்தை கொண்டாடும் நீங்கள் இதை எப்பொழுது கொண்டாட போகிறீர்கள்... கொந்தளித்த ஓட்டேரி நரி

VIJAY
VIJAY

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக அதிக ரசிகர் பட்டாளங்களைக் கொண்டுள்ள நடிகராக உள்ள நடிகர் விஜய். இவர் நடிப்பில் பெரிய ஆர்வம் இல்லாமலும் சினிமா மீது கொண்ட காதலாலும் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவிற்கு அடம் பிடித்து வந்தவர். அப்படி அடம் பிடித்து தந்தையின் பேச்சையும் மீறி சினிமாவில் வர வேண்டும் என்ற ஆசைக்காக சினிமாவிற்கு வந்து தனது முதல் படத்திலேயே பல விமர்சனங்களை பெற்று மன உளைச்சலுக்கு ஆளானார். 


அதற்குப் பிறகு சினிமாவில் உள்ள நுணுக்கங்களையும் மக்களை கவரும் விதத்தையும் தனது நடிப்பால் எப்படி எல்லாம் மக்களை மகிழ்விக்கலாம் என்பதையும் படிப்படியாக கற்று தெரிந்து அடுத்தடுத்து வெளியான இவரது படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகவும் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டையும் பெற்று வந்தது. அப்படி இவர் நடித்த பல படங்கள் இன்றளவும் தமிழ் இளைஞர்களின் ஃபேவரிட் படமாகவும் ஏன் சில குடும்பங்களில் விஜயின் சில குறிப்பிட்ட படங்கள் எத்தனை தடவை தொலைக்காட்சியில் போட்டாலும் பார்க்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்கள். அப்படி ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான தனது நடிப்பை வெளிப்படுத்தி வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளதாக அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். 

இந்த அதிர்ச்சி ரசிகர்களுக்கு இன்பமாக இருந்தாலும் விஜய் இன்னும் இரண்டு படங்களில் மட்டுமே நடிக்க உள்ளதாகவும் அதற்குப் பிறகு சினிமா துறையை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் தெரிவித்தது அவரது ரசிகர்களுக்கு கவலை அளிக்கக் கூடிய அதிர்ச்சியாக மாறியது. இதனால் படிப்படியாக விஜய் தெரிவித்த இந்த அதிரடி கருத்தை ஏற்றுக் கொண்டு வந்த அவரது ரசிகர்களுக்கு விஜயின் கடைசி இரண்டு படங்கள் குறித்து அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 2004 ஆம் ஆண்டு விஜய் மற்றும் திரிஷாவின் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் ரீரிலிஸ் செய்யப்பட்டது. இந்த படம் 2004 ஆம் ஆண்டு வெளியான பொழுதே சூப்பர் டுப்பர் ஹிட் ஆன படமாகும். கிட்டத்தட்ட 200 நாட்களுக்கு மேலாக இந்த படம் திரையரங்குகளில் ஓடியதும் சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனையை புரிந்த விஜயின் முதல் படமாகவும் கில்லி திரைப்படம் திகழ்ந்தது.


மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற விஜயின் படங்கள் பட்டியலில் முக்கிய இடத்தையும் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்றிருந்த கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது விஜய் ரசிகர்களால் விஜயின் ஒரு புது படம் வெளியாவது ஒன்று கொண்டாடப்பட்டது. எப்படி என்றால் ரீரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் திரையரங்கில் வெளியான அதே சமயத்தில் விஷாலின் ரத்தினம் திரைப்படமும் வெளியானது ஆனால் அந்த படத்தையே கில்லி திரைப்படம் மிஞ்சிவிட்டது! அதோடு இந்த கில்லி ரிலீஸ் இதுவரை 100 கோடிக்கு மேல் வசூலை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிற நிலையில் கில்லி திரைப்படத்தில் ஓட்டேரி நரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த தாமு அதிர்ச்சியோடு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். அதாவது 20 வருடங்களுக்குப் பிறகு ரிலீஸான திரைப்படத்தை விசில் அடித்து ரசிகர்களும் மன்றங்களும் கொண்டாடுகிறார்கள் ஆனால் 20 வருடங்களுக்கு முன்பு நடப்பட்ட மரக்கன்றுகளின் நிலைமை என்ன அவை தற்போது பல இடங்களுக்கு நிழலை ஆற்றி வருகிறது நிழல் குடையாக இருக்கிறது அந்த மரக்கன்றுகளை எப்போது விசில் அடித்துக் கொண்டாடப் போகிறீர்கள் என்று வேதனை கலந்த ஆதங்கத்தோடு பேசியுள்ளார். நடிகர் தாமுவின் இந்த கருத்து கில்லியின் ரீலிசை கொண்டாடும் விஜயின் ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்று வருகிறது.