Cinema

இதுவரை கண்டு கொள்ளாத மருமகளை சிறப்பாக கவனித்த மாமியார்..!!. ஆலியா மாமியார் இப்படிப்பட்டவங்களா...

ALYAMANASA, SANJEEV KARTHIK
ALYAMANASA, SANJEEV KARTHIK

வெள்ளித்திரை நடிகை நடிகர்களுக்கு எவ்வளவு ரசிகர்களும் பிரபலமும் இருக்கிறதோ அதேபோன்று சின்ன திரையிலும் உள்ள நடிகை நடிகர்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவர்களையும் மிகப்பெரிய பிரபலமாகவே தமிழக மக்கள் பார்த்து வருகின்றனர். ஏனென்றால் சின்னத்திரை என்பது வீட்டில் உள்ள வயதானவர்கள் இல்லத்தரசிகள் மற்ற பலரின் பொழுதுபோக்காக உள்ளது. அப்படிப்பட்ட சின்னத்திரையில் தமிழ் சினிமாவின் முன்னணி சின்னத்திரை நடிகையாக இருப்பவர் ஆலியா மானசா. இவர் தனியார் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி என்ற தொடரின் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கினார். மேலும் தற்பொழுது மற்றொரு தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியின் பிரபல தொடரான இனியா என்று தொடரிலும் முன்னணி நடிகையாக நடித்து நல்ல வரவேற்பை கண்டார்.


முன்னதாக ராஜா ராணியில் இவருடன் நடித்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆலியா மானசா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் சின்ன திரையில் மிகவும் பிரபலமான ஜோடியாகவும் உள்ளனர் ஆலியா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் ஜோடி! இவர்கள் சமூக வலைதளத்திலும் படு ஆக்டிவாக இருந்து வருகின்றனர் அவ்வப்போது தங்களுக்குள்ளான ஸ்வீட்டான மெமரிசை சமூக வலைதளத்தில் பதிவிட்டு மக்கள் மத்தியிலும் லைக்ஸ் மற்றும் வரவேற்பை பெற்று வருகின்றனர். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடக்க உள்ளதாக பெரும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இவர்களது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் இவர்களின் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்தால் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பதிவிடப்படுகிறது இதனால் பெரும் குழப்பத்தில் இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு ரீல்ஸ் மூலமாக நாங்கள் விவாகரத்து எல்லாம் செய்யப்போவதில்லை என்று ஸ்வீட்டாக ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டனர்.

இதனை அடுத்து ஒரு குட் நியூஸ் சொல்ல போகிறோம் என்று ஒரு பதிவிட்டு மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆலியா மற்றும் சஞ்சீவ் ஜோடி தாங்கள் சென்னையில் புதிதாக கட்டிய வீட்டிற்கு குடியேறியதாக பதிவிட்டனர். இப்படி தங்களுடைய ஒவ்வொரு மகிழ்ச்சிகர நிகழ்வுகளை மக்களோடு பகிர்ந்து வருகின்ற ஆலியா மற்றும் சஞ்சீவ் ஜோடியின் திருமணத்தை அவர்களின் இரு வீட்டிலும் ஏற்றுக்கொள்ளவில்லை! இரு வீட்டின் பெற்றோர்களையும் எதிர்த்தே இவர்கள் திருமணம் செய்தனர் அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியுள்ள நிலையில் தனது மருமகளுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை என்று ஆலியாவின் மாமியார் ஆலியாவிற்கு ஒரு சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த சர்ப்ரைஸ் என்ன என்பதையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு மக்களிடம் பகிர்ந்து உள்ளார் ஆலியா!! அதாவது ஆலியாவும் சஞ்சீவ்வும் ராஜா ராணி என்ற நாடகத்தின் மூலம் ஒன்றாக நடிக்க ஆரம்பித்து பிறகு காதல் வயப்பட்டு விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளிலேயே தனது காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.

ஆனால் இவர்களின் திருமணம் ஆலியா மற்றும் சஞ்சீவின் வீட்டில் கடுமையான எதிர்ப்புகள் நிலவியது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக இரு வீட்டிலும் நல்ல சூழ்நிலை நிலவவில்லை இந்த நிலையில் சமீபகாலமாக ஆலியா மானசா குடும்பத்தினரோடு இணக்கமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இதுவரை தனது மருமகளுக்கு எந்த ஒரு விஷயமும் செய்ததில்லை என்று சஞ்சீவின் தாய் ஆலியாவை ஒரு நகை கடைக்கு அழைத்துச் சென்று அவருக்கு பிடித்தமான நகைகளை வாங்கி கொடுத்து அழகு பார்த்துள்ளார். இதனை ஆலியா தனது சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார் இது பலரின் கவனத்தையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.