Cinema

வைரமுத்து கருத்து சொல்லியது ஒரு குற்றமா? என்ன நடந்தது பாருங்க..! பாவம் கவிஞர்..!

Vairamuthu
Vairamuthu

உள்துறை அமைச்சர் அமிட்ஷா தாய் மொழியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் அதே நேரத்தில் ஆங்கிலத்திற்கு மாற்றாக இணைப்பு மொழியாக இந்தியை கருத்தில் கொள்ளவேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார். இதற்கு மாநில மொழி பேசும் கட்சிகள், சினிமா துறையினர் போன்ற பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


தமிழக முதல்வர் ஸ்டாலினும் உள்துறை அமைச்சர் அமிட்ஷா கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்,  இது ஒருபுறம் என்றால் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமிட்ஷாவின் கருத்திற்கு எதிர் கருத்து தெரிவித்தார் அதில், வடக்கே வாழப்போன தமிழர் இந்தி கற்கலாம், தெற்கே வாழ வரும் வடவர் தமிழ் கற்கலாம், மொழி என்பது தேவை சார்ந்ததே தவிர திணிப்பு சார்ந்ததல்ல.



வடமொழி ஆதிக்கத்தால் நாங்கள் இழந்த நிலவியலும், வாழ்வியலும் அதிகம்; இதற்கு மேலும் இந்தியா? தாங்குமா இந்தியா? என கேள்வி எழுப்பி இருந்தார். அவர் கேள்வி எழுப்பியதுதான் பாக்கி இணையதள வாசிகள் வைரமுத்துவை வைத்து செய்து வருகின்றனர்.

இதில் ஒருவர் ஆரிய உதடுகள் உன்னது.. திராவிட உதடுகள் என்னது.. ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே.. என பாடல் வரிகள் எழுதியப்போ இனித்தது.. இந்தி மொழி கற்க வேண்டும் என கூறினால் கசக்கிறதா? என நெட்டிசன்கள் வைத்து செய்து வருகின்றனர்.