Cinema

"பாவம் மனுஷன்" மனசாட்சி இல்லையா? செந்திலை நோக்கி இப்படியா பாட்டு போடுவது?.. இங்க பாருங்க!

seepu senthil
seepu senthil

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மினி நாடாளுமன்றம் என கூறப்படும் உத்திர பிரதேசத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றி வருகின்ற 2024 மக்களவை தேர்தலிலும் பாஜக மீண்டும் வெற்றி பெரும் என்று கூறப்படுகிறது.


இது பாஜகவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்றால் பலர் வெளிப்படையாக வருத்தம் அடையும் சூழலில் உண்டாகியுள்ளது, குறிப்பாக திமுக ஆதரவு பத்திரிகையாளர்கள் பலர் கண்ணீர் விட்டு அழாததுதான் மிச்சம் அந்த வகையில் இணையத்தில் கடந்த மூன்று நாட்களாக சிக்கி இருப்பவர் பத்திரிகையாளர் செந்தில் என்ற செந்தில்வேல்.

இவர் உத்திர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றால் நான் கங்கையில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்ததாகவும், தற்போது பாஜக வெற்றி பெற்று இருப்பதால் எப்போது செந்தில் தற்கொலை செய்துகொள்ள போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பலரும் செந்திலுக்கு போன் செய்தும் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது, இந்த சூழலில் செந்தில் யூடுப் சேனல் ஒன்றில் தான் தற்கொலை செய்து கொள்வேன் என சொல்லவில்லை எனவும் சிலர் தவறாக பரப்புகிறார்கள் எனவும் தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார்.

இருப்பினும் நெட்டிசன்களும் பாஜகவினரும் விடுவதாக இல்லை, இந்த சூழலில் செந்தில் பேசியதை பகிர்ந்து அதற்கு கீழே இந்தி பாடலான சவாரியா எனும் பாடலை ஒட்டி பகிர்ந்துள்ளனர், அதாவது செந்திலை சாகவில்லையா என்ற தோணியில் கிண்டல் செய்து வருகின்றனர். மீம்ஸ் போட்டு கிண்டல் செய்த நெட்டிசன்கள் தற்போது பாடலை இணைத்து செந்திலை பங்கம் செய்து வருகின்றனர்.

ஒரு மனிதனை இப்படியா என்று கிண்டல் செய்வது என்று கேள்வி எழுப்பினால் அவரது பேசும் பேச்சு.. நடக்கும் செயல்களுக்கு ஏற்ற மாதிரிதான் பதிலும் இருக்கும் செந்திலின் பேச்சு எப்படி இருக்கிறதோ அதே பாணியில் பதிலடியும்