Tamilnadu

"அட்டை பூச்சி" ஒரே குடும்பம் வாருங்கள் சபதம் ஏற்போம் அட்டாக் மோஃடில் கிருஷ்ணசாமி..!

Krishnasamy
Krishnasamy

தமிழக உழைப்பாளி வர்க்கமே.!அட்டைப் பூச்சிகளை போல 50 ஆண்டுகளாக நம்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரே குடும்ப ஆட்சியாளர்களை அகற்றிட ஒன்றுபடுவோம் இந்த மண்ணும் ஆட்சியும் நமக்கானதாக்கிடச் சபதமேற்றுக்கொள்வோம். என அறிக்கை வெளியிட்டுள்ளார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-


உலகெங்குமுள்ள தொழிலாளர்களுக்கு எனது 'மே தின' நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மேற்கத்திய நாடுகள் மாறிய பின்னரும் தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ’அதிக உற்பத்தி, அதிக லாபம்’ என்ற ஒரே குறிக்கோளோடு உணவு உண்ணவும், உறங்கவும், இயற்கை உபாதைகளைக் கழிக்கவும்

கூடச் செய்ய விடாமல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப் பட்டார்கள். இந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற ’8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணிநேர ஓய்வு’ என்று போராடிப் பெற்றதே ’மே 1 அல்லது சர்வதேச தொழிலாளர் தின’மாக அனுசரிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி நாடுகளைக் கடந்து ’தொழிலாளர்கள்’ என்ற ஒற்றை அடையாளத்தோடு அணிதிரட்டப் படவும்,

அதன்மூலம் உற்பத்தி முறையில் மாற்றங்களைக் கொண்டு வந்து ஏழை, எளிய தொழிலாளர் வர்க்கங்களுக்கான அரசுகளை அமைக்கவும் வேண்டுமென்ற உணர்வுகளை ஊட்டுவதே ’மே 1 - தொழிலாளர் தின’த்தின் நோக்கமாகும். பல்லாண்டு காலம் போராடி, அல்லல்பட்டு, ரத்தம் சிந்திப் பெறப்பட்டதே அந்த உரிமை ஆகும். அதன் மகிமையை முழுமையாக உணராமலேயே இயந்திரத்தனமாக ’மே1’ ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

அது தொழிலாளர்களுக்கான தினமாகத் துவங்கப் பட்டிருந்தாலும், வர்க்க விடுதலையையும், உழைக்கும் வர்க்கம் ஆட்சி-அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்கான நோக்கத்தை நிறைவேற்ற விவசாயத் தொழிலாளர்களாக இருந்தாலும், நிறுவனப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரிந்தாலும், உதிரிப் பாட்டாளிகளாக இருந்தாலும், ஜாதி, மொழி, இனம், தேச எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டு, அதற்கு முன்னோடியாக நாம் வாழுகின்ற தமிழ் மண்ணில் உழைக்கின்ற வர்க்கம் அனைவரும் ஒன்றிணைந்து,

ஒற்றை சிந்தனையில் செயல்பட ’மே 1 ஆம் நாள்’ உறுதி ஏற்றிட அனைத்து உழைப்பாளிகளுக்கும் அறைகூவல் விடுக்கிறோம். அட்டைப் பூச்சிகளை போல 50 ஆண்டுகளாக நம்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரே குடும்ப ஆட்சியாளர்களை அகற்றிட ஒன்றுபடுவோம் என கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார் கிருஷ்ணசாமி அவர்களின் அறிக்கையில் இருந்து 50 ஆண்டுகளாக ஒரே குடும்ப ஆட்சி என்று திமுகவை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் திமுகவினர் மட்டும் புதிய தமிழகம் கட்சியினர் இடையே வாக்குவாதம் உண்டானது குறிப்பிடத்தக்கது.