Cinema

தீவிர சீகிச்சையில் மன்சூர் அலிகான்.. வெளியானது ரிப்போர்ட்..!

Mansoor alikhan
Mansoor alikhan

தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக சுயேச்சை சின்னத்தில் களம் இறங்குகிறார். இந்நிலையில் அவருக்கு திடீர் என்று உடல் நல பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் அவரே பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.


பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு முடிவடைந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தீவிரமாக வேலூர் தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். நேற்று காலை  முதல் ஆம்பூர் - வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். அப்போது குடியாத்தம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சென்னை கே.கே நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மன்சூர் அலிகானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தற்போது அறிக்கையொன்று விடுத்துள்ளார். அதில், “நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க... குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன். அடிவயிறு வலி தாங்க முடியாமல் மருத்துவமனையில் சேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மருத்துவர்கள் எனக்கு விஷ முறிவு, நுரையீரல் வலி போக Trips குடுத்தார்கள். இன்று மாலைக்குள்  சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் களத்தில் கணிசமான வாக்குகளை சேகரித்து வைத்திருந்ததாகவும் முஸ்லீம் வாக்குகள் அதிகப்படியாக கவர்ந்ததாலும் வேண்டும் என்று இது போல அவருக்கு செய்திருப்பதாக கூறப்படுகிறது.