Politics

பிரபல திமுக பெண் தலைவர் மீது பெற்ற தாய் பரபரப்பு குற்றசாட்டு!! தேர்தல் களமே மாறியது!!

பிரபல திமுக பெண் தலைவர் மீது பெற்ற தாய் பரபரப்பு குற்றசாட்டு!! தேர்தல் களமே மாறியது!!
பிரபல திமுக பெண் தலைவர் மீது பெற்ற தாய் பரபரப்பு குற்றசாட்டு!! தேர்தல் களமே மாறியது!!

திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவிற்கு எதிராக அவரது தாயார் பேசியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான பூங்கோதை ஆலடி அருணா மீண்டும் களம்காண்கிறார்.


தொகுதியில் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் திமுக வேட்பாளர் பூங்கோதை குறித்து அவரது தாயார் கமலா பேசிய  வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

தனியார் தொலைக்காட்சியான நியூஸ் ஜெ- விற்கு பேட்டியளித்துள்ள அவர், எனது கணவர் ஆலடி அருணா மிகவும் நேர்மையானவர் என்றும் யாரிடமும் லஞ்சம் வாங்காதவர் சொந்த பணத்தில் உதவி செய்து வந்தவர் 

நீங்கள் தொகுதியில் பழைய ஆட்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள் உண்மை தெரியும் ஆனால் பூங்கோதை அதற்கு எதிர்மாறாக உள்ளதாகவும், கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி இருக்கிறார். திருவண்ணாமலையில் ஒரு ரிசார்ட், மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட் கட்டியுள்ளதாகவும் பூங்கோதையின் தயார் கமலா தெரிவித்துள்ளார்.

மேலும் பூங்கோதை ஜெயிக்கக்கூடாது என தான் கடவுளை வேண்டுவதாகவும், எனவே தயவுசெய்து அவருக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம் எனவும் கமலா தெரிவித்துள்ளார். பெற்ற தாயே தனது மகள் லஞ்சம் வாங்கி குவித்துள்ளார் அவருக்கு வாக்களிக்காதீர்கள் என நேரடியாக தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ஆலங்குடி பகுதியில் திமுக வேட்பாளருக்கு எதிராக  வெளியான குற்றச்சாட்டின் மூலம் அந்த பகுதியில் திமுகவின் அஸ்திவாரமே கலகலத்து போயுள்ளது.