Tamilnadu

மீண்டும் வாண்டடாக வந்து சிக்கிய தமிழச்சி தங்கபாண்டியன் வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Tamilachi thangapadiyan
Tamilachi thangapadiyan

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பல்வேறு மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர், பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து ஒரு தரப்பு மக்கள் வீட்டில் சோகத்துடன் இருக்க, திமுகவினர் ஸ்டாலினை புகழ்ந்து அவரிடம் நன் மதிப்பை பெறவேண்டும் என எண்ணி மக்களின் வெறுப்பை சம்பாரித்து வருகின்றனர்.


அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நெட்டிசன்களிடம் சிக்கி இருக்கிறார் தென் சென்னை திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவமனையிலும் இடமில்லை, மாயணத்திலும் இடமில்லை என ஊரே போர் குரல் எழுப்பி கொண்டிருக்கும் சூழலில், தமிழச்சி,  ஸ்டாலினை புகழ்ந்து ஒரு கார்ட்டூன் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

அவ்வளவுதான் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர், இந்த புகைப்படத்திற்கு காட்டும் ஆர்வத்தை மக்களை காப்பாற்ற செயலில் இறங்குங்கள் என ஒருவர் தெரிவிக்க அதற்கு தமிழச்சி நான் களத்தில் இறங்கி பணி செய்து வருகிறேன் என அவருக்கு குறிப்பிட விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன அதில் சில உங்கள் பார்வைக்கு

மேலும் பார்க்க https://twitter.com/karthikkg25/status/1394171568603889664?s=19