Tamilnadu

கனிமொழி பரப்பிய போலி செய்தி புட்டு புட்டு வைத்த அண்ணாமலை.. ஒத்து ஊதிய ஊடகங்கள் அதிர்ச்சி!!

Annamalai's Comment about Kanimozhi's speech
Annamalai's Comment about Kanimozhi's speech

குடியரசு  தினவிழாவில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரையை மத்திய அரசு நிரகாரித்ததாக தமிழகத்தை சேர்ந்த சில ஊடகங்கள் செய்தி பரப்பின இந்த சூழலில் திமுக எம். பி கனிமொழியும் மத்திய அரசை கடுமையாக கண்டித்து இருந்தார்.


இது குறித்து கனிமொழி தெரிவித்ததாவது..இதுதொடர்பாக கனிமொழி அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, குடியரசு தின விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது.

இவர்களை பற்றிய மத்திய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தியா என்பது அனைவருக்குமானது, வடமாநிலங்களால் மட்டும் ஆனது கிடையாது. மத்திய அரசு உடனடியாக இந்த ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கனிமொழி பரப்பியது போலி செய்தி என்பது தெரியவந்துள்ளது, குடியரசு தின அணிவகுப்பில் பங்குபெறும் வாகனங்களை மத்தியஅரசு முடிவு செய்வதில்லை என்ற விளக்கத்தை மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது இதன் மூலம் கனிமொழி உட்பட பலர் கூறியது பரப்பியது போலி செய்தி என்பது தெரியவந்துள்ளது, இந்த நிலையில் பாஜக தலைவர் இதன் அரசியலை புட்டு புட்டு வைத்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்திற்கு வாய்ப்பு கொடுத்தது ஏன் தற்போது ஏன் வாய்ப்பு இல்லை என்பதை அண்ணாமலை உரிய ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார் இதன் மூலம் கனிமொழி உட்பட பலர் மத்திய அரசு மீது பரப்பிய செய்தி போலி என்பது தெரியவந்துள்ளது அண்ணாமலை தெரிவித்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.