Cinema

#BREAKING அன்றே "கணித்த சூர்யா திமுக தலையில்" விடிந்தது.. வசமாக சிக்கினர்..!

Surya
Surya

சூர்யா திரைப்படத்தில் வரும் பல திரைக்கதைகள் உண்மையாக மாறி இருப்பதாக கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பரவலான பேசு பொருளாக மாறியிருந்தது இந்த சூழலில் சூர்யாவின் கதைகளை ஒப்பிட்டு மீம்ஸ்கள் பரவி வந்தன. இந்த சூழலில் தற்போது சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உண்மையாக மாறி இருக்கிறது.


விருதுநகரில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு பல்வேறு நபர்கள்  மிரட்டி மிரட்டி மாமா மீண்டும் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் இதே திரைக்கதை இடம்பெற்று இருக்கும், திரைப்படத்தில் மத்திய அமைச்சர் மகன் வில்லனாக காட்டி இருப்பார்கள் ஆனால் நிஜ வாழ்க்கையில் வில்லனாக வந்தவன் திமுக பிரமுகர்கள் ஹரிஹரன் மற்றும் ஜூனைத் அகமது என்ற இருவரும் இன்னும் சிலரும் அமைந்துள்ளனர்.

விருதுநகரை சேர்ந்த 22 வயது பெண் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலரத வீதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஹரிஹரன் என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. காதலன் என்பதால் அந்தபெண் அவருடன் தனிமையில் சந்தித்து பேசிவந்துள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர்.காதலியுடன் நெருக்கமாக இருந்ததை ரகசியமாக ஹரிஹரன் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் மொன்னி தெருவை அவரது நண்பரான திமுக நிர்வாகி ஜீனைத் அகமது, பிரவீன் மற்றும் அதே தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேரும் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.இதனையடுத்து ஜீனைத் அகமது அந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் உட்பட 7 பேர் ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

எங்களது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதன் காரணமாக அந்தப்பெண் யாரிடமும் சொல்லாமல் அச்சத்தில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் இளைஞர்களின் தொல்லை தாங்க முடியாமல் டிரைவர் வேலை பார்க்கும் மாடசாமியிடம் எடுத்துச்சொல்லி, காப்பாற்றும்படி கெஞ்சியிருக்கிறார்.

மாடசாமியோ, அந்த வீடியோவை தனது செல்போனுக்கு ஃபார்வேர்ட் செய்துகொண்டு, ‘அந்த 7 பேரிடம் பழகியதைப் போல என்னிடமும் பழகவேண்டும். மறுத்தால், இந்த வீடியோவை உன் அம்மாவிடம் காட்டுவேன்.’ என்று மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். உதவ வேண்டிய மாடசாமியும் மிரட்டி, அதே தவறைச் செய்ததால் விரக்தியடைந்த இளம்பெண், கடந்த 6 மாத காலமாக வீடியோவைக் காட்டி மிரட்டி, 7 பேர் தன்னைத் தொடர்ந்து சிதைத்து வந்ததையும், மாடசாமியின் அத்துமீறலையும்,

குமுறலுடன் புகாராக எழுதி, விருதுநகர் பாண்டியன் நகர் காவல்நிலையத்தில் கொடுத்தார்.இந்தச் சம்பவம் தொடர்பாக திமுகவை சேர்ந்த இருவர், கூலி தொழிலாளிகள் இருவர், பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பார்த்த பிறகே அந்த பெண் தைரியமாக குரல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

வழக்கமாக பாஜக அதிமுகவை. எதிர்க்க சூர்யா வசனங்கள் திரை காட்சிகள் டூல் கிட்டாக பயன்படுத்தப்பட்ட சூழலில் தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திமுகவிற்கு விடியலாக விடிந்துள்ளது, பொள்ளாச்சி சம்பவத்தை குறிவைத்து பேசிய பலரும் தற்போது விருதுநகர் சம்பவத்திற்கு வாய் மூடி மவுனமாக இருப்பதாக கூறப்படுகிறது.